ஒரு பெருங்கதையாடல்!
_____________________________________
ஒரு ராமாயணத்தை
இன்னொரு மகாபாரதம் கொண்டு
சப்ளாக்கட்டையை
தட்டி தட்டி
சுரங்களையும் அசுரங்களையும்
கலந்து பிசைந்து
கதைக்கும் பெருங்கடலா இது?
தெரியவில்லை.
எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள்
இன்னொரு
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின்
எழுத்துக்களின்
நாடித்துவாரங்களுக்குள் எல்லாம்
புகுந்து புகுந்து
தும்மல் போட்டு போட்டு
புல்லரித்துக்கொள்வது தான் இது.
இரு கல்லும் மோதி
பொறி பறக்கும்
சிக்கிமுக்கி கல்லாக
சிந்தனைகளின்
கற்பனை நிகழ்வுகளின்
உரசல்களையெல்லாம்
தேன் பிழிந்து தருவது தான் இது.
இப்படித்தான்
கும்பகோணம்
அணைக்தால் தெருவுக்குப் போனால்
"மோக முள்ளின்"
பாபுவும் யமுனாவும்
அங்கே தூசிகளிலும்
காத்துப்பிழம்பின் நெஞ்சுத்துடிப்புகளிலும்
காதல் கொப்பளிக்காமல்
குமிழிகள் விட்டுக்கொண்டே இருப்பதை
புளகாங்கிதத்துடன்
"பௌராணிகம்" செய்வதும் தான் இது.
பவா செல்லத்துரை
நாவல்களின்
"லைவ்" நாவல்கள்.
இலக்கு இல்லாத திசைகளையும்
கோர்த்து இலக்கிய அனுபவத்தின்
ஆச்சரியமான திசைகளைக்கொண்டு
அருந்தத் தரும்
அற்புதக்"குடி"யிருப்பு
பவா செல்லத்துரை அவர்கள்
_____________________________________________
சொற்கீரன்