செவ்வாய், 5 அக்டோபர், 2021

 கடவுளுக்கெல்லாம்  கடவுள்.

________________________________________________ருத்ரா.


நீங்கள் கடவுளைக் கும்பிடும்போது 

உங்களைக் கும்பிடுவது யார் தெரியுமா?

கடவுள் சொன்னார்:

நான் தான் உன்னைக் கும்பிட்டுக் கேட்கிறேன்.

என்னைக் கண்டுபிடித்தாயே!

என் கடவுள் யார் என்று கண்டுபிடித்துச் சொல்லேன்......

நீங்கள் தலையைச் சொறிந்து கொள்ளுகிறீர்கள்.

இன்னும் உள்ளே சொறிந்து தேடு.

கடவுள் சிரித்துக் கொள்கிறார்.

"தெரியவுில்லையே ஸ்வாமி"

உன் அறிவு தான் கடவுளுக்கெல்லாம் கடவுள்.

"ஒண்ணும் விளங்கவே இல்லை"

ரொம்ப. சந்தோஷம்.....அது வரை

இந்தக்கல்லுக்கு 

"கும்பாபிஷேகம்" நடத்திக்கொண்டே இரு.


____________________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக