புதன், 27 அக்டோபர், 2021

 


புதிதாய் ஒரு குரல்!

___________________________ருத்ரா


"மனிதா!மனிதா!"

....................

..................

அற்ப புழுக்கள் 

ஆச்சரியப்பட்டன‌

இப்படியெல்லாமா

இருந்தனவா

நம் பெயர்கள்?

"புரட்டு"ச்சுவடிகளை 

புரட்டிப்பார்த்தன.

"அய்யோ"

அவை பதறின.

தேவ தூஷணை அல்லவா இது?

தண்டனை

கிருமி போஜனம்

கும்பி பாகம் அல்லவா.

வேண்டாம் அந்தப்பேர்கள்.

மிலேச்ச பாஷை இது.

தோஷம்.தோஷம்.

பொந்துகளுக்குள் 

போய்விடலாம் வாருங்கள்.

போய் அடைந்து கொண்டன 

அந்த புழுக்கள்.

___________________________________________



___________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக