வெள்ளி, 22 அக்டோபர், 2021




ஓலைத்துடிப்புகள் -116

______________________________கல்லிடைக்கீரன்.


நவ்வி நிரைத்த திரி மருப்பின் வால் இனம்

மின்னல் குழுமி வான் போழ்ந்தன்ன‌

உள்ளம் கலித்து நிழல் குளித்த இலஞ்சிய 

சுனையாய் பசலை பாய்தர படர்த்தாள் அளியள்!

பொருள் வேட்கையில் ஆறு இறந்தவர்

பொறை தொறும் பொறை தொறும் 

பொறிமலிக் காட்சியின் புள்ளி நன்மான்

கணம் கொளப்பாய்ந்த சாயல் அத்தம்

அவள் துள்ளும் மீன்விழிக் கடையென மருளும்.

எவன் கொல் செய்யும்?அவர் கொடுங்கவர் ஆரிடை?

சால்கொடு கீறி ஊன் கிழித்தன்ன‌

செஞ்சுவல் வித்திய அருவினை உழவர் 

ஊன் பொதியா  பசுங்குடை தலைஇய சூடி

வெயில் மறைப்ப    மரைக் கோடு நீட்டிய‌

மண்கொற்றக் குடையுளும்

அவன் ஊர்ந்தான் அவள் உள்ளிப் பெரு ஊழே!

______________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக