திங்கள், 25 அக்டோபர், 2021



ஓலைத்துடிப்புகள்-117

______________________________________கல்லிடைக்கீரன்.



சிறு வெள்ளருவி பெருங்கல் நாடன்

கல் பொருதிறங்கும் நுண்டுளி அன்ன‌

கவி நிழற்சுனையின் கலங்கு பளிக்கின்

அவள் உரு தேடி அவள் விழி பொருதும் 

கயற்சுழி ஆழும் என   மலைந்தானே!

நீள் அடர்க்கானிடை இலைக்குடை மறைக்க‌

இரவெது?பகல் எது? என மருள் படுத்தாங்கு

முளி திரை முன்னீர் ஏணி இறந்தும் 

எல்லை வெண்குரல் பாழ்வெளி பரப்ப‌

சில் பூ நீட்டும் அவள் நகையே   தீங்கரை!

தும்பி நிரைய அஞ்சிறை பறைய

திரள் காழ் மராத்த திண் பெருங்கானம்

மயக்குறு பல் குறி மாயம் காட்டும்.

ஆயிழை தோன்றும் இரவுக்குறியின் 

அழல் அவிர் பாயல் ஆனாது கலுழும்

நோயில் அவனும் துயில் கெடுத்தானே.

________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக