புதன், 20 அக்டோபர், 2021

சாமியோ சாமி!

_________________________________ருத்ரா.


ஏஞ்சாமி? 

நா சாமி  கும்புட 

வந்துருக்கேஞ் சாமி .

எனக்கும் கொஞ்சம் 

சாமிய காட்டுங்க சாமி. 


ஆசாமிகளின் மந்திரங்கள் 

உண்மையான சாமிகளை 

இங்குமங்கும் அலைக்கழித்தன. 


நூல்களுக்கெல்லாம் நூல்களின் 

கருவாக திருவாக 

இருக்கும்  அந்த "சாமி" தான்

அங்கு

நூல் இல்லாமல் நின்றிருந்தார்.


நகரு...நகரு....

காவலர்கள் அவரை விரட்டித் தள்ளினார்கள்.

மந்திரத்தை நிறுத்திவிட்டு

 இந்த சாமி கத்தினார்....

தமிழில் தான்!

"இந்தப் படியைத் தாண்டி

சூத்ராள்ளாம் வந்துடுர்ரா...

அவாளை அந்தப் பக்கமா தள்ளிவிட்டுருங்கோ . ..

__________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக