புதன், 20 அக்டோபர், 2021

 

ஓலைத்துடிப்புகள்-115

____________________________________கல்லிடைக்கீரன் .


நுண்கலை நன்மான் முதன் முதல் கவர்த்த‌

மணிச்சுவட்டின் கண் படுத்தன்ன

கழை வரி தோறும் வளை நெகிழ்திறங்கும்

மென்சாயல் நிழல் தோய்த்து ஆங்கே

மயிலாடு முன்றில் அன்ன 

கடுஞ்சுரம் நீர்க்கும் .

பேஏய் ஆறும் பின்னே ஏகும்.

வாட்சுறா வழங்கும் வௌவ்வல் ஆழியென

மயக்குறூஉம் காட்சியும் மறைந்திடும் மன்னே!

நெய்தல் கனைத்த கதிர் எதிர் கல் சேர்பு கதிரும்

குடை தேடும் வெஞ்சுரம் திணை மயங்க‌

கல்லாடன் கை ஓலை எழுத்தும் கனற்கீர‌

எரிக்கும் பாலையின் கடுவழியிடையும்

அவள் பாளை உதிர்த்த  நறவு எயிற்று நகையும்

பாலை மீட்டி களி கூட்டும்மே! 

______________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக