செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பெண்ணே !

பெண்ணே !  
==============================ருத்ரா

அம்மி மிதித்தது மிதித்தது தான்.
மிக்ஸி வந்தபின்
இன்னும் எதற்கு அம்மி.

"பெய்யெனப் பெய்யும் மழை"
எழுதும்போது ஞாபகத்துக்கு வந்தது
"வாசுகி"யின் கண்ணீர்.

அழாதே!பெண்ணெ!
முகம் துடைத்துக்கொள்...உனக்கு
வானம் கூட கிழித்து தரும் மின்னலை!

விமானம் ஓட்டு!நாட்டை ஆளு!
குலுங்குவது உன் வளையல்கள் அல்ல‌
இந்த உலகம்!

ராமன் காலில் சீதை விழுந்திருந்தாள்.
அதனால் தான் ராமன் கால் பட்டு
அகலிகை உயிர்த்தெழுந்தாள்.

நிலத்தை தோண்டி தோண்டி
பார்த்தது போதும் பெண்ணே !
"ஐ பேட்"உனக்கு ஆயிரம் ரெக்கைகள்.

==================================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக