வெள்ளி, 11 அக்டோபர், 2024

ஒரு துயரமான நகைச்சுவை.

 

ஒரு துயரமான நகைச்சுவை.

____________________________________________


அடிமைப்படுத்துபவர்களை விட‌

அடிமைப்படுபவர்களே

ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு

ஒரு பெரிய "கில்லட்டின்".

கசாப்பு கத்தியைக்கூட‌

ருசியான தழை என்று

நாக்கை நீட்டும் வெள்ளாடுகள்

மலிந்த தேசத்தில்

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்

சரி

இதே மேளம் தான்.

இதே ஆட்டம் தான்.

கொண்டாட்டம் தான்.

பட்டாசுகள் தான்.

ஜிலேபிகள் தான்.

பெரிய வாணலியில் கிண்டுகின்ற‌

அல்வாவே

நம் வரவு செலவு சாசனம் என்று

புளகாங்கிதம் கொள்ளும்

அறிவு ஜீவிகளும்

அறிவில்லாத ஜீவிகளும்

மத்தாப்பு 

கொளுத்திக்கொண்டிருக்கிற‌

தேசத்தில்

சர்வாதிகாரி என்று

எவரும் இல்லை.

சிந்தனை சூன்யம்

அல்லது

சூன்ய சிந்தனை

என்று எப்படி 

வைத்துக்கொண்டாலும் 

இதுவே

சர்வாதிகாரத்தின் வற்றாத ஊற்று.

கணிப்பொறி கிளிக்குகள்

எல்லாம் 

டாய் ஸ்டோரிகள் தான்.

வாக்குகள் 

என்பதற்கும் ஒரு 

கூர்மையான ஓர்மை உண்டு.

அது இல்லாத‌

வாக்குச்சீட்டுகளும்

வெறும் காகிதக்குப்பைகளே.

இவிஎம் ஆனாலும் சரி.

சீட்டுமுறை ஆனாலும் சரி

முதலில் சொன்ன வரிகளே

இந்தியா எனும் 

இருண்ட கண்டத்தின்

வறண்ட வரிகள்!


"அடிமைப்படுத்துபவர்களை விட‌

அடிமைப்படுபவர்களே

ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு

ஒரு பெரிய "கில்லட்டின்"..."


அறிவின்மையும் 

அறிவுடைமையும்

ஒன்றுக்கொன்ன்று

முகம் பார்த்துக்கொள்ளும்

கண்ணாடிகளே

என்பது தான்

ஒரு துயரமான நகைச்சுவை.


________________________________________________

சொற்கீரன்













கனவுக்குள் ஒரு கனவு

 


கனவுக்குள் ஒரு கனவு

________________________________________

சொற்கீரன்.


படு

என்று கண்களை அழுத்தியது.

கண்களை திறக்க முடியவில்லை.

இடுக்கு வழியாக பார்த்தால்

பிம்பங்கள் இழை பிரியாமல்

மசமசத்துக்கிடந்தன.

ஆழ்துயில் கடலில் 

அமிழ்ந்து விட்டேன்.

அப்புறம்

திரைப்படம் ஓடியது.

திரைப்படமா?

யார் எடுத்தார்கள் அந்த‌

படத்தை?

எவனோ எடுத்தான்.

எதற்கோ இங்கு காட்டுகிறான்.

அது தான் சொல்லிவிட்டார்களே

தூணிலும் இருப்பான்

துரும்பிலும் இருப்பான் என்று.

சரி தான்.

நரசிம்மம் வாயைப்பிளக்கிறது.

குடல் நீள நீள 

ரத்தம் வழிய வழிய‌

கோபத்தின் ரங்கோலியெல்லாம்

குரூரச்சித்திரங்கள்.

ஆனால் எப்படி

இவர் இங்கே வந்தார்?

வெண்தாடியும் கைத்தடியுமாய்..

பின்னாலேயே

விஷ்ணுவும்....

"பின்ன என்ன தான் 

செய்யச்சொல்றீங்க

எத்தனை அவதாரம் எடுத்து

சூசகமாக சொன்னாலும்

உங்களுக்கு

அறிவு வேலை செய்ய மாட்டேங்குது.

கடவுள்..பிரம்மம் 

அது இதுண்ணு

இந்த ஏழை பக்தர்களை

பாடா படுத்துறீங்க.

அதெல்லாம் ஒண்ணுமே இல்லடா

முண்டங்களா

(கடவுளே இப்படி திட்டுறார்னு

நெனைக்காதீங்க...)

இல்லவே இல்லைன்னா

இல்லவே இல்லை தான்.

அதத்தான் இவர் ஆணித்தரமா

சொல்றார்ல..

ஸ்லோகம் சொன்னாத்தான் ரிஷியா?

இவர் பகுத்தறிவுச் செல்வம்டா

ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி இவரே தான்.

இப்ப நான் சொல்றேண்டா

இல்லவே இல்லைடா

அது உங்க பயப்பிரம்மம்டா..

கேக்கபோறீங்களா இல்லையா....

கடவுள் கர்ஜித்தார்

நரசிம்மமாய்...

...........


"ஆமாம்...என்ன இது?"

தாயார் தொட்டு எழுப்பினார்.

பாற்கடல் உறக்கத்திலுமா கனவு?

பெருமாள் முறுவலித்தார்.

........

"போதும் தூங்கினது.

இன்னும் கெளம்பலையா?

நாழியாச்சே...

அந்தக்கோயிலுலே இன்னிக்குத் தானே

உங்கள் சத்பிரசங்கம்.."

என்னத்தச்சொல்றது

பகவான் தூக்கமே இன்னும்

கலையலே"

பௌராணிகரும்

முறுவலித்தார்.


__________________________________________________________



வியாழன், 10 அக்டோபர், 2024

விண்ணிலே ஒரு அரிய காட்சி


விண்ணிலே ஒரு அரிய காட்சி



 Comet with 28-lakh-kilometre-long tail photobombs stunning solar eruption (msn.com)

9428115495%7Ctwgr%5E46ef0077a9c2fcf4d47a190e03a796aaa3c01c46%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fscience%2Fstory%2Fcomet-with-28-lakh-kilometre-long-tail-photobombs-stunning-solar-eruption-2614524-2024-10-10

வேட்டையன்

 

வேட்டையன்

_________________________________


புதர்களுக்குள்ளிருந்து

வந்து விட்டான்.

இங்கே

எந்த மிருகத்தை

சுட்டு வீழ்த்துவான்

என்பது தெரிந்ததே.

சம்பவாமி யுகே யுகே என்று

வந்து விஷ்ணு சக்கரத்தை

காட்டிவிட்டு போய்விடுவான்.

சம்ப‌வமும் அதே.

யுகமும் அதே.

அதே தூசி படிந்த

அட்டைத்தெய்வக்களின்

அம்புலிமாம வதங்கள்.

இதுக்கு

கணினிகளின்

அல்காரிதங்கள்

அலங்காரத்தோரணக்கள்

தொங்க விட‌

அப்புறம்

வசூல் புள்ளிவிவரங்கள்.

அன்பான மக்களே

இந்த அடிப்படையான புள்ளிவிவரங்கள்

உங்களுக்குத் தெரியுமா?

கோடிக்கணக்கான மக்கள் வாழும் தேசத்தில்

ஒன்றிரண்டு சதவீத மக்களிடமே

தொண்ணூற்றெட்டு சதவீத செல்வங்கள்

குவித்து வைத்துக்கொள்ள‌ப்பட முடியும்

என்று.

காமிராவிலிருந்து வரும்

இந்த சோப்புக்குமிழிகளால்

சோற்றுக்கவலைகள்

தீரவே போவதில்லை.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

சொற்கீரன்




பட்டாசுகளும் ஜிலேபிகளும்.

 


பட்டாசுகளும் ஜிலேபிகளும்.

____________________________________


மேலை நாட்டிலே

எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக் இஞ்சினீயரிங்

ராக்கெட் இஞ்சினீயரிங்

ஜெனடிக் எஞ்சினீயரிங்

என்று கொடி கட்டி பறக்கிறார்கள்.

நம் நாட்டில்

கொடி கட்டி பறக்கும்

இந்த‌

"சோசியல் இஞ்சினீயரிங்" என்பது தான்

என்ன?

உண்மையில் இதற்கே

நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

இங்கே

ஜனநாயகம் என்பது

அறிவு பூர்வமானது அல்ல.

உணர்ச்சிப்பிரவாகம் மட்டுமே.

அதுவும்

ஆயிரம் ஆயிரம் வாய்க்கால்களில்

சாதிகள் எனும் சாக்கடையாய்

தேங்கியே கிடக்கும்.

தேர்தல் காலங்களில் மட்டும்

சில குள்ளநரிகளும் ஓநாய்களும்

மக்களின் 

இந்த துக்கடா உணர்ச்சிகளை

பொறித்து எடுத்து

பக்குவமாய் தீனி காட்டும்.

சாணக்கிய தந்திரம் என்று

அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு

தர்மத்தை

எப்போதுமே

சூது

கவ்விக்கொண்டிருக்கும்.

ஓட்டுப்பெட்டிகள் நிரம்பி வழியும்.

இது மூச்சு முட்டும் அளவுக்கு

அதில் அடைத்துக்கொண்டு விடுவதால்

ஜனநாயகம் எப்போதோ

மூச்சை விட்டிருக்கும்.

அது போதும்

இஷ்டப்படி நாற்காலிகளை

இழுத்துப்போட்டுக்கொண்டு

அமர்ந்து கொள்ள.

அந்த முகம் தெரியாத மாயாவிப்பூதத்தை

தன் ஏவல்களுக்கு

அடிமைப்படுத்தும் கலையே

சோசியல் இஞ்சினீயரிங்.

காலண்டர்களில்

ஆகஸ்டுகள் வந்தன‌

ஆகஸ்டுகள் போயின‌

ஆனால் 

சுதந்திரம் மட்டும்

இமை விரிக்கவே இல்லை.

இதில்

140 கோடி என்ன?

200 கோடி என்ன?

சிதறிக்கிடகின்ற நெல்லிக்காய்கள் 

ஒரு பக்கம்.

சேர்க்கத்துடிக்கும்

ஜனநாயக உந்து விசை

ஒரு பக்கம்.

இதுவே நம் விடியல்களின்

இருட்டு "அனாடமி"


____________________________________________

சொற்கீரன்



புதன், 9 அக்டோபர், 2024

தேர்தல் எங்கே நடந்தால் என்ன?


 

தேர்தல் எங்கே நடந்தால் என்ன?
தேர்தல் தேர்தல் தான்.
மக்கள் மக்கள் தான்.
ஆலிவர் கோல்ட்ஸ்மித்
எழுதினான்.
அது ஒரு கட்டுரையாக‌
எஸ் எஸ் எல் சி
ஆங்கிலப் பாடப்புத்தகத்தில்
இருந்தது
"அன் எலக்ஷன் இஸ் டிஸ்க்ரைப்டு" என்று.
எங்கும்
எப்போதும்
அதன் குறுக்குவெட்டுத்தோற்றம்
ஒன்றே தான்.
ஏதாவது கொடுக்க வேண்டும்.
அந்த கட்சி ஜெயித்து விடலாம்.
ஆனால்
மக்கள் எப்போதும்
தோற்றுக்கொண்டே இருப்பார்கள்.
அது அவர்களுக்கு
ஒரு பொருட்டே இல்லை.
நமக்கு கடவுள் இருக்கிறார்.
கோவில் இருக்கிறது
விழா இருக்கிறது
மதம் இருக்கிறது.
பசிக்கு சோறு கிடைத்தவுடன்
அப்புறமும்
இப்படித்தான்
பசி வறுமை பிணி
என்ற சக்கரத்தைச்
சுற்றிக்கொண்டே
இருக்க வேண்டும்
பகவான் சக்கரமும்
இந்த கேள்வியை மட்டுமே
சுற்றிக்கொண்டிருக்கும்.
தீர்வு எனும்
சிந்தனை பற்றி
சிந்திக்கவே முடியாது.
இடைத்தேர்தல் நமக்கு
விடை தெரியா
இடைவெளியா?
தலைகள் "எண்ண"வேண்டும்.
தலைகளை எண்ணவா ஜனநாயகம்?
பாதி வரை
மயிலிறகு தான்.
பாதிக்கு மேல் ஒன்று
வந்தாலே போதும்.
பட்டாக்கத்தி ஆகி விடும்.
சாதாரண மக்கள்
சதா ரணமாகும்
அவலங்களில் தான்.
சொற்போருக்கு பஞசமில்லை.
சோற்றுக்குத் தான் பஞ்சம்.
"தேர்தல் எங்கே நடந்தால் என்ன?
தேர்தல் தேர்தல் தான். மக்கள் மக்கள் தான். ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதினான். அது ஒரு கட்டுரையாக‌ எஸ் எஸ் எல் சி ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இருந்தது "அன் எலக்ஷன் இஸ் டிஸ்க்ரைப்டு" என்று. எங்கும் எப்போதும் அதன் குறுக்குவெட்டுத்தோற்றம் ஒன்றே தான். ஏதாவது கொடுக்க வேண்டும். அந்த கட்சி ஜெயித்து விடலாம். ஆனால் மக்கள் எப்போதும் தோற்றுக்கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. நமக்கு கடவுள் இருக்கிறார். கோவில் இருக்கிறது விழா இருக்கிறது மதம் இருக்கிறது. பசிக்கு சோறு கிடைத்தவுடன் அப்புறமும் இப்படித்தான் பசி வறுமை பிணி என்ற சக்கரத்தைச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் பகவான் சக்கரமும் இந்த கேள்வியை மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும். தீர்வு எனும் சிந்தனை பற்றி சிந்திக்கவே முடியாது. இடைத்தேர்தல் நமக்கு விடை தெரியா இடைவெளியா? தலைகள் "எண்ண"வேண்டும். தலைகளை எண்ணவா ஜனநாயகம்? பாதி வரை மயிலிறகு தான். பாதிக்கு மேல் ஒன்று வந்தாலே போதும். பட்டாக்கத்தி ஆகி விடும். சாதாரண மக்கள் சதா ரணமாகும் அவலங்களில் தான். சொற்போருக்கு பஞசமில்லை. சோற்றுக்குத் தான் பஞ்சம். "எல்லாருக்கும் எல்லாமும்" எப்போது கிடைக்கும்? ஏ ஐ களைக்கொண்டு குவித்தாலும் "பங்கு"சந்தையே இங்கு சங்கு சக்கரம். தரித்திரத்தின் சரித்திரத்தில் பொற்காலம் என்பது கண்ணீர் மழையில் தான். குருதிகள் கொட்டி எழுதிய‌ குருட்சேத்திரம் என்றாலும் சூழ்ச்சியே சூழ்ந்து நிற்கும். ____________________________________________________ சொற்கீரன்

 

ய சாங் புக்!

 

ய சாங் புக்

_______________________________


ஆங்கில இசையின் 

இதயமே இந்த "சாங்க்" தான்.

அப்போ இது "பொயட்ரி" இல்லையா

என்ற கேட்பதில் 

எந்த அர்த்தமும் இல்லை.

ஆம்

அர்த்தங்கள் இல்லாதவற்றில்

அர்த்தங்களை தேடி

அல்லது

அர்த்தங்களில்

அர்த்தம் இல்லாத நிழல்களைத்

தேடி

துடிக்கும் இதயங்களின்

இசையே

"ஆல்பம்"ஆகிறது.

நள்ளிரவு வானத்தை

லேசர்களால் 

சுவையான கொத்து பரோட்டா

வெளிச்சங்கள் ஆக்கி

தோல் கருவிகளும்

நரம்புக்கருவிகளும்

மின்காந்தப் பேராற்றில் 

அழகிய அழகிய அலைகளாய்

நம் மனக்கரையை

வருடிக்கொடுக்கும்.

மனிதனின் ஏக்கங்களுக்குள்

இத்தனை மில்லியன் மெகாவாட்டுகளா?

புல்லரித்துப்போனதில்

ஜேம்ஸ்வெப் காலக்ஸி சித்திரங்கள்

எத்தனை? எத்தனை?

இசையின் அர்த்தமே இந்த‌

ஆல்பங்களில் தான்

அகராதிகளாய் இழைந்து

கிடக்கின்றன!

________________________________________

சொற்கீரன்