வெள்ளி, 9 ஜூன், 2023

அகழ்நானூறு 47"

 


நெடுநல்வாடை ....ந‌க்கீரர்

__________________________________________________‍


புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்,

பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்,

பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி,   15

இருங்களி பரந்த ஈர வெண்மணல்

செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்,

கயல் அறல் எதிரக், கடும் புனல் சாஅய்ப்

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை

அகல் இரு விசும்பில் துவலை கற்ப,   20

அங்கண் அகல்வயல் ஆர் பெயல் கலித்த

வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க,

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்

கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை,

நுண்ணீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு,   25

தெண்ணீர்ப் பசுங்காய் சேறு கொள முற்ற,

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்

குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க;  (13 – 28)



அகழ்நானூறு 47"

_______________________________சொற்கீரன்



கல் புடைத்து பெயர் தரூஉம் 

கருவி வானம் சிவணிய பைம்பெயல்

குணில்பாய் பேரோலி குரல்வீங்கு உகளல்

உடைகுமிழ் பளிங்கின் உருகெழு வனப்பில்

சினைய தூங்கும் நுண்டுளி கழைய‌

சிலம்பு இமிழ் கண்சிறை 

வியாழன், 8 ஜூன், 2023

திரு முத்தரசு அவர்களுக்கு

 அன்புள்ள அத்தான் திரு முத்தரசு அவர்களுக்கு


அகநானூற்றுப்பாடல்கள் படித்து அவற்றின் சொல் ஆழம் பொருள் ஆழம் மூழ்கி கற்பனை வளம் பருகிக்களித்துபடைத்த சங்கநடைச்செய்யுட் கவிதைகளே எனது "அகழ்நானூறு" என்பது.இன்று காலை 5 மணியளவில் நான் எழுதியதே இந்த "அகழ்நானூறு 46" ஆகும்.மாமூலனார் (அகம் 1) வெள்ளிவீதியார் (அகம் 362) ஆகிய செம்புலவர்களின் பாடல்கள் கண்ணுற்ற போது அந்த எழுத்தின் ஆழம் என்னைச்சிலிர்க்க வைத்தது.அதன் வெளிப்பாடே எனது படைப்பான அகழ்நானூறு.இதன் பொழிப்புரையை இன்னும் எழுதத்தொடங்கவில்லை.

பொருள் தேடிச்செல்லும் தலைவன் அடர்ந்த காட்டிடை அஞ்சாமல் சென்று கொண்டிருந்த போதும் தலைவின் முறுவல் அழகே அவன் அந்த வன்சுரம் கடக்க உதவுகிறது.அதே முறுவலும் அவள் பசலையுமே அவனைஅவளை நோக்கி சந்திக்கவும் விரையும் படி தூண்டுகிறது என்பதே இதன் கருத்துரை.

தங்கள் திறனுரையை இந்த செய்யுட்பற்றி நான் அறிய விழைகிறேன்.


இப்படிக்கு 

அன்புடன் 

இ பரமசிவன்.



அகழ்நானூறு 46

________________________________________சொற்கீரன்


ஊழ் வீழ்த்த உறுநனி பொழுது 

ஊரத் தந்து கொல்சுரம் நீந்தி

பெண்ணைப்புறத்து குரூஉமயிர் அன்ன‌

போர்த்த எண்கின் முருக்கு அவிழ் 

வள் உகிர் கூரிய அறையலும் 

பொலம் கிளர் வட்டம் பொறிசெய் வண்ணம்

நீள் நெடும் மலையின் உரு காட்டி

அசைவும் உருவ அஞ்சுவரு பரும்பாம்பு

வழிமறித்துக் கிடப்ப அஞ்சாதிறத்து

ஆறு நீந்தி செம்பொருள் வேட்டத்துச்

செறுவும் கடந்து நிரம்பா நீளிடை

மீமிசை உய்த்தலும் மிக்கூர்ச்செலவு

நிறுத்தல் இன்றி நீட்டிய செய்து

கழை முதிர் நெல்லின் வளி முயங்கு

கான் தொறும் கல் தொறும்

படுகடாஅம் படுப்ப மழகளிற்று

நடையின் வாங்கு அமை விதிர்ப்ப‌

சேயிழை முறுவல் உள்ளத்து வாங்கி

அவிழ் இழை பொருத அடுபோர் பசலை

அவள் விழியின் அருவியில் இழிந்த காட்சி

அவன் அகத்துள் ஈர்ந்த பொழுதே

மின்னல் தைத்தென அவன் விரைந்தான் மன்னே

அவள் நிழற்சுவட்டின் பளிங்கின் முற்றம்

சேர்ந்து கைவளை நெகிழ்வு நீக்கிடும் 

வண்ணம் கொண்டு எண்ணம் ஏந்தி

காற்றையும் பிளந்து கடுகியே விரைந்தான்.


_____________________________________________________________





அகழ்நானூறு 46

 அகழ்நானூறு 46

________________________________________சொற்கீரன்


ஊழ் வீழ்த்த உறுநனி பொழுது 

ஊரத் தந்து கொல்சுரம் நீந்தி

பெண்ணைப்புறத்து குரூஉமயிர் அன்ன‌

போர்த்த எண்கின் முருக்கு அவிழ் 

வள் உகிர் கூரிய அறையலும் 

பொலம் கிளர் வட்டம் பொறிசெய் வண்ணம்

நீள் நெடும் மலையின் உரு காட்டி

அசைவும் உருவ அஞ்சுவரு பரும்பாம்பு

வழிமறித்துக் கிடப்ப அஞ்சாதிறத்து

ஆறு நீந்தி செம்பொருள் வேட்டத்துச்

செறுவும் கடந்து நிரம்பா நீளிடை

மீமிசை உய்த்தலும் மிக்கூர்ச்செலவு

நிறுத்தல் இன்றி நீட்டிய செய்து

கழை முதிர் நெல்லின் வளி முயங்கு

கான் தொறும் கல் தொறும்

படுகடாஅம் படுப்ப மழகளிற்று

நடையின் வாங்கு அமை விதிர்ப்ப‌

சேயிழை முறுவல் உள்ளத்து வாங்கி

அவிழ் இழை பொருத அடுபோர் பசலை

அவள் விழியின் அருவியில் இழிந்த காட்சி

அவன் அகத்துள் ஈர்ந்த பொழுதே

மின்னல் தைத்தென அவன் விரைந்தான் மன்னே

அவள் நிழற்சுவட்டின் பளிங்கின் முற்றம்

சேர்ந்து கைவளை நெகிழ்வு நீக்கிடும் 

வண்ணம் கொண்டு எண்ணம் ஏந்தி

காற்றையும் பிளந்து கடுகியே விரைந்தான்.


_______________________________________________________

புதன், 7 ஜூன், 2023

அகழ்நானூறு 45'

 





அகழ்நானூறு 45

___________________________________சொற்கீரன்


உருவத்து வெரீஇய சுரனிடை ஒரு கல் 

குதிரை போன்ம் சூர் படு ஆரிடை

நவிரல் வான்பூ அவன் நசை நளி ஊர‌

அவள் இறைவழி ஊரும் வளை அலங்கு

எல்லின் வழங்கலும் வௌவலும் 

அவன் மழவத்திரள் சிதைப்ப 

ஆரிடை அலைவுறு கூர் வள்ளுகிர்

பெண்ணை போர்த்த குரூஉமயிர் யாக்கை

எண்கின் எதிரலும் அஞ்சாத்தகையன்

பாம்புரி வீட பரல் நெரி ஆற்றின்

பொரிய இடறி கால்பெரிது கடுக்கும்

நோதலும் பெரிதென எண்ணா மாண்பின்

வரூஉம் வரூஉம் வீ அலரி இறைய 

நெடுவழி பரத்த அவளின் மைவிழி

சிவணிய நெஞ்சில் தன் நெஞ்சு ஒற்றி

விரைவான் கல்படு அத்தம் நீங்கி

உள்ளத்துள் அவள் நுதல் வாளின் ஈர்தல்

நுடங்கியும் செல்வான் ஒல்லாமை ஆற்றி.


______________________________________________________

பக்தனிடம் ஒரு வரம்


என்னது அது?

குழப்பம் என்று

ஆயிரம் விதமாய் 

சொல்கிறார்கள்?

குழம்பிய கடவுள்

பக்தனிடம்  ஒரு

வரம் கேட்கிறார்.

முதலில் 

உன் ஆனா ஆவன்னாவில்

என்னிடம் பேசு.

மிலேச்சத்தனமான‌

உன் சஹஸ்ரநாமங்கள் 

எனக்கு வேண்டாம்.


______________________________________சொற்கீரன் 

புல்லுக்கும் புழுவுக்கும்

 


புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌

கவிதை எழுதத்தெரியும்.

வானமே தான் அவற்றின்

காகிதமும் எழுத்தும்.

அவை

சூரியனைக்கொப்புளித்து

சொற்களில் பல் தேய்த்து

விடியலை வரவேற்றன.

அவற்றின் மூச்சுகள் தோறும்

விடுதலையின் அணுவுலைக்கூடம்.

அவற்றின் பட்டாம்பூச்சிகளில்

வர்ணங்கள் மட்டுமே இருந்தன‌

வர்ணாசிரமங்கள் இருந்த தில்லை.

கடவுள் எனும் ஆபாசத்தை

அவை இன்னும் 

அறியவே இல்லை.


_________________________________சேயோன்.

வியாழன், 1 ஜூன், 2023

கொஞ்சம் கிட்டே வா!

 

கொஞ்சம் கிட்டே வா!

___________________________________________சேயோன்.



சூரியனே 

கொஞ்சம் கிட்டே வா!

உன் கன்னத்தை வருடிக்கொள்கிறேன்.

தர்ப்பைப்புல் மந்திரங்களால்

உன்னை கிச்சு முச்சு மூட்டிக்கொண்டிருந்தபோது

கடைசியில் சுண்டல் பிரசாதம்

குருட்டாம்போக்காய்

ஒரு கணிதம் சொன்னது.

கடவுள் என்ற ஒன்றை

மனிதன் புரிந்து கொள்ளவே கூடாது

என்பது தான் அது.

இன்று அறிவியல்

உன்னை என் மேஜை மீது

"போன்ஸாய்" போல்

முகம் காட்டிச்சொல்கிறது.

உன் நெருப்பின் சிவப்பு

வெட்கத்தினால் அல்ல.

என்னை தினம் தினம் பார்த்து தான்

நீ சன்னலை திறக்கவேண்டுமா?

உன் அறிவுக்குழம்பில் 

நான் இந்த நாட்களை

உனக்கு உருட்டி விளையாடுவது

தெரியாமால்

அந்த ருத்திராட்சங்களையா

நீ இன்னும் உருட்டிக்கொண்டிருப்பது?

கொஞ்சமாய் செல்லமாய்

நீ சிவப்பது தான்

அந்த மின்காந்தப்புயல்களின் செங்கரு

என்று புரிந்து கொண்டு விட்டோம்

நாங்கள்.

அண்டத்தின் இந்த பாதையில் 

நாம் கைகோர்த்தே செல்வோம் வா.


__________________________________________________







https://www.msn.com/.../the-inouye.../ss-AA1c0GOw...

WITH THANKS FOR THE LINK