திங்கள், 8 ஜூலை, 2019

குரல்

குரல்





குரல்
================================================ருத்ரா இ பரமசிவன்

ஒற்றையாய் நின்று ஒரு தவம்.
குருவிக் கூட்டங்களுக்கு ஏங்கி
அந்த பஞ்சு சிறகுகளின் வருடல்களுக்கு
கனவு கண்டு
நிற்கிறது இந்த ஒற்றை மரம்.
சூரியக்குளியலில்
வருடங்கள் எனும் சோப்புக்கட்டிகள்
கரைந்து
இப்படி ஒரு சிறு மரமாய் நிற்கிறது.
இலை இடுக்குகளில்
வெள்ளி ஒழுகும் வெளிச்சத்தின்
குமிழிப்பூக்களில்
தன் கன்னி ஏக்கங்களை
நிரவிக்கொள்ளும் சல சலப்புகளே
அதன் இதயத்துடிப்புகள்.
சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்கள்...
கால் பந்தாட்டக்காரர்களின்
விறைப்பான உதைப்புகள்..... .
அடியில் சிலநேரங்களில்
இளஞ்ஜோடிகள்
தங்கள் தாகத்தை
சில நுணுக்கமான சிற்பவடிவங்களைப்போல்
வெளிப்படுத்தும் இனிய தருணங்கள்.....
எல்லாமும்
அதன் வேர்த்தூவிகள் முனை வரைக்கும்
நனைத்து நிற்கும்.
அதன் இலை நரம்போட்டத்திலும்
"மெகந்தி"தீட்டும்.
"இப்போது தான் தெரிந்ததா?
என்னை?
வாருங்கள் ..வந்து அமருங்கள்"
அதன் குளிர்நிழலில் சற்று
அமரலாம் என்று அங்கே சென்ற
எனக்கு
அந்த மெல்லிய இனிய குரல் கேட்டு
திடுக்கிட்டு விட்டது.
இது என்ன குரல்?
யார் பேசுவது?
எனக்கு உடம்பு சில்லிட்டு விட்டது.
திரும்பி பிடரி தெறிக்க விரைந்தேன்.
"போகாதீர்கள் ...போகாதீர்கள்.."
குரல்
என்னைத் தொடருகிறது!

==================================================

the EVM

the EVM
-----------------------------------------
Our holy
But the largest
"White Elephant" born
In the digital womb
from where the dices are thrown
making our "bi-cameral" DEMOCRACY
always a myth of long drawn history
of gloom
studded with caste and creed.
In the darkest woods of computer memory
the people lost all their memory
And the question still hangs
to an existence or non-existence
but they are programmed
to  extinct to a void
But with praying hands and
chanting mouths
at frozen mum...a deadly silence
With no norms and forms
Of Democracy
Alas! to be only cherished
But not to be brought to LIFE.
-------------------------------------------

a road leading to A ROAD

a road leading to A ROAD
------------------------------ruthraa e paramasivan

When I gaze through a feeder road
it shows the other but
the invisible end of the
tunnel
Again pregnant with an infinity of
of A ROAD
Bearing an ever floating
name that
Suggests a God or no God...
a Google page is opened with
Fantacy of doors
With all its murals of graphics
Sans rationalist charms.

----------------------------------


வியாழன், 4 ஜூலை, 2019

கடவுளே...

கடவுளே...
===================================================ருத்ரா

கடவுளே
கை கூப்புகின்றோம்
தினம் தினம்
உன் திசை நோக்கி.
திசை தான் தெரியவில்லை.
ஆனாலும்
கை கூப்புகின்றோம்.

கடவுளை
உன் முகம் கண்டு
தரிசனம் செய்து களிக்கின்றோம்.
உன் முகம் தெரியவில்லை
ஆனாலும்
உன்னை தரிசனம் செய்கின்றோம்.

உன்னைப் புகழ் பாடி
தினம் தினம்
சொற்கள் அடுக்குகின்றோம்.
சொற்களில் வெறுமை தான்
உள்ளதென்று அறிகின்றோம்.
ஆனாலும்
உன் புகழ் பாடுகின்றோம்.

நீ யார்?
நீ எங்கே?
நீ எப்பொழுது பிறந்தாய்?
பிறந்தாய் என்று
இறந்து போவதும்
இயற்கை தானே!
அதை எங்களால்
பொறுக்க முடியாது.
அதனால்
உனக்கு பிறப்பு இறப்பு
இல்லை
என்று சொல்லி
பூரித்து புல்லரித்து
புளகாங்கிதம் கொள்கின்றோம்.

இப்படி
கேள்விளையும் விடைகளையும்
எங்களுக்குள்
கோர்த்துக்கொண்டு
நீ இருப்பதால்
நீ இருக்கிறாய் என்றும்
நீ இல்லை என்றும்
நாங்கள்
"பாஷ்யங்கள்" படைக்கின்றோம்.

வானத்திலிருந்து
ஒரு குரல் கேட்கிறது.

நீ என்னைப்பார்க்கிறாய்.
நான் உன்னைப் பார்க்கிறேன்.
இது
வெறும்
பிம்பங்களின் பரிமாற்றம்.

அப்படி என்றால்
நீ யார்?
நான் யார்?

விஞ்ஞானி கூறுகிறான்.
இப்போதைக்கு
அது "ஹிக்ஸ் போசான்".

என்னது?
ஹயக்கிரீவரா?
விளங்கும்படி சொல்லுங்களேன்.

ஆகட்டும் இருங்கள்.
சாக்பீஸில்
கணித சூத்திரங்கள்
வரிசையாய்
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அந்த கணிதம்
எனும் மொழியில்
சுவர்கள் இல்லை?
வேலிகள் இல்லை?
தொடர்ந்து அவை
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஆத்திகன் கண்ணீர் மல்கி
கன்னத்தில் போட்டுக்கொள்கிறான்.
நாத்தினோ
மொழியல்லாத அந்த மொழிக்குள்
நுழைந்து
போய்க் கோண்டேயிருக்கிறான்.

ஆமாம்.
அது யார்?
அது எங்கே?
அது எது?

முற்றுப்புள்ளிகளின் தோல்வியில்
அறிவின் வெற்றி
புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.

=========================================================

செவ்வாய், 2 ஜூலை, 2019

பிக் பாஸ் எனும் புதைகுழிகள்

பிக் பாஸ் எனும் புதைகுழிகள்
================================================ருத்ரா


தொலைக்காட்சிகள்
ஏதோ மந்திரவாதிகளின்
சூ மந்திரக்காளிப் பெட்டிகள்
கர்ப்பம் தரிக்கும் காட்சிகளாக‌
பரிணாமம் பெற்றது
வளர்ச்சியா? வீழ்ச்சியா?
எங்கோ
ஆயிரம் ஒளியாண்டுகள்
தூரத்தில் இருக்கும்
ஒளிபிழம்புகளை
நம் வீட்டு அறைக்குள்
கொண்டு வந்து
சமையலுக்கு வெங்காயம் உரிப்பது போல்
இதழ் இதழாக
பிரபஞ்ச முகம் உரித்து
உற்றுநோக்குவதாய் ஆனது
நம் அறிவு வளர்ச்சியின்
பரிணாமங்கள்.
அதை வைத்துக்கொண்டு
மனித உள் ஆழங்களில்
தூண்டில் இடப்போகிறேன்
என்று
சிக்மெண்ட் ஃப்ராய்டின் முகமூடியைப்
போட்டுக்கொண்டு
சில்லறை மழையை
விளம்பரங்கள் மூலம்
பொழிய வைத்து
பார்வையாளர்களை
அச்சம் முதல் அசிங்கம் வரை
ஒரு மாயக்கயிறு கட்டி
அறிவு வீழ்ச்சியின் ஒரு
பாமரத்தனமான மலையை
வடம் பிடித்து இழுத்துக்கொண்டிருப்பதே
இந்த பிக் பாஸ் மாய்மாலங்கள்.
உண்மை மனிதர்களின்
பிம்பத்துக்கு சட்டை போட்டு
ஜீன்ஸ் மாட்டி
மற்றும் சல்வார் கமீஸ்
சில்லிப்புகளோடு
சித்திரம் காட்டும்
இந்த "ஹாலுசினேஷன்"களின்
வக்கிரங்கள்
சமுதாய மன மலர்ச்சிக்கு
தோண்டப்படும் புதைகுழிகள்.
பரபரப்பு திகில்
குற்ற மிழைக்கும் வெறிப்படுகைகள்
இவற்றை பூச்சாண்டி காட்டி
காதல் காமம் இவற்றையும்
பஞ்சு மிட்டாய் ஆக்கி
ஒளி பரப்பும்
இந்த சமுதாய மனமுறிவுகளில்
ஆக்கபூர்வம் என்பதை விட‌
அழிவுக்கு தினவு ஊட்டும்
காட்சி விருந்துகளே அதிகம்.
உலகம் பூராவுமே
மனிதனின் பலவீனங்களே
பணம் காய்ச்சி மரங்களாய்
மகசூல் குவிக்கின்றன.
இதற்கு எதிர் மறை சிந்தனையோட்டம்
ஒன்று
சமுதாய மின்காந்தப்புலனில்
ஒரு மின்னொளிப்புயலை
தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம்
நமக்குள்
உந்துதல் ஆகத்தான் வேண்டும்.
இந்த புதைகுழிகளில்
புதைந்து போய்விடாதீர்கள்
அன்பான பார்வையாளர்களே!

===========================================================

யோகிபாபுவின் தர்மப்பிரபு

யோகிபாபுவின் தர்மப்பிரபு
==========================================ருத்ரா

புராணங்களில்
எமதர்மன் என்பவன்
எருமைமாடும் பாசக்கயிறுமாய்த்தான்
அலைவான்.
இறப்புக்கடவுள்
இங்கே எப்படி
யோகிபாபுவிடம்
சிரிப்புக்கடவுள் ஆனார்?
இன்று நேற்று அல்ல‌
சினிமா நடிகர்களின்
சிரிப்பு வசனங்கள்
எப்போதுமே இந்த
எம தர்ம ராஜாவை
சின்னா பின்னப்படுத்தி
சும்மா ஆயிரம் வாலாக்களை
தெறிக்கவிட்டு
சிரிப்பினால்
சிலுப்பவைத்துக்கொண்டிருக்கின்றன.
ஐந்து ஆண்டுகளாய் நடத்திய‌
தமாஷ்
போதாதென்று
இன்னொமொரு ஐந்தாண்டு
தமாஷ்க்கு
குத்தகை எடுத்த காவிக்காரர்கள்
பற்றி வயிறு குலுங்க
சிரிக்கவைக்கும் பாணியை
யோகிபாபு கையில் எடுத்திருப்பதே
வசூல் குவியக்காரணம்.
முக நூல் வழியாகவும்
யோகி பாபுவுக்கு
ஒரு செவண்டி எம் எம் திரை
சிரிக்க சிரிக்க
விரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய
நிகழ்வு தான்!
அந்தக்காலத்தில்
திராவிட ஆட்சியை கிண்டல்
பண்ணிய "துக்ளக் சோ"வுக்கு
ஒரு படை திரண்டது போல்
இப்போதும் இளைஞர் படை
திரள்கிறது.
"ஆரியக்கூத்தாடினாலும்
காரியத்தில் கண் வைத்திருப்பவர்கள்
அல்லவா வடக்கத்தியர்கள்.
பாருங்கள்
புதுச்சேரி வழியாகவும்
ஒரு பொம்மைத்துப்பாக்கியை
நீட்டுகிறார்கள்.
தமிழர்களே!
துப்பாக்கி வேண்டுமானால்
பொம்மையாக இருக்கலாம்
ஆனால் குறி வைப்பது
உண்மை தான்.
சிம்பு தேவர்களே
இந்த யோகி பாபுவை வைத்து
அந்த பொம்மை ராஜ்யத்தையும்
கொஞ்சம்
தோலுரித்துக்காட்டுங்களேன்.
நாங்கள் முன்னூறுக்கும் மேல்
ஜெயித்த பெரிய ஜனநாயகம் என்பார்கள்.
அன்று அந்த "துக்ளக்கும்"
இந்த பெரிய ஜனநாயகத்தை
சட்டை செய்யவில்லையே.
மதம் சுரண்டலுக்கு துணைபோயிருக்கலாம்.
மதமே சுரண்டல் ஆனது தான்
இன்றைய வேதனையான வரலாறு.
வேதனைகளையும் நகைச்சுவையாக்கி
நம் சிந்தையில் கூர் தீட்ட வேண்டிய‌
கால கட்டம் இது.
இட்லரின் நறுக்கு மீசையை
ஒட்டி வைத்துக்கொண்டு
அன்று
சார்லி சாப்ளின் அடிக்காத லூட்டியா?
யோகிபாபுகள்
நம் விடியலுக்கு வழிகாட்டட்டும்.

==============================================

திங்கள், 1 ஜூலை, 2019

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.
==============================================ருத்ரா

தமிழ் என்றால் தமிழுக்குள்ளும்
ஆயிரம் மொழிகளின் விதை இருக்கும்.
உலகம் இமை விரித்திட‌
சிந்தனைக்கதிர்கள் தந்தது தமிழ்.
ஞா என ஒலிக்கும்போது
நாவின் ஊஞ்சல் ஓசை கேட்கும்.
ஞாலுதல் என்பது தொங்குதல் குறிக்கும்.
நாண்டுகிட்டு இறந்தான் என்பது
ஞான்று கொண்டு இறந்தான் என்பதே ஆகும்.
ஊஞ்சல் எனும் ஊசல் தான்
இந்த ஞாலம் எனும் உலகம்.
விண்வெளியில் ஈர்ப்புக்கயிற்றில்
தொங்குவதே நம் ஞாலம் என்னும்
உலகம் ஆகும்.
ஞான் என்றும் நான் என்றும்
உட்கிடக்கை அறிவதே ஞானம் ஆகும்.
தமிழ் எனும் சொல்லுக்கும்
ஒரு வேர் உண்டு.உயிர் உண்டு.
ஒலித்தல் இமிழ் ஆகும்.
தம் ஒலி எனும் நம் மொழி அல்லது பேச்சு
இங்கு தமிழ் ஆனது.
தமிழ் எனும் மொழி
இனிய தண்ணிய அருவி போல்
ஒலிக்கும்.
தனிமையில் இருக்கும் போதும்
தமிழ் பற்றி நினையுங்கள்.
தமிழ் தனில் நனையுங்கள்.
சிந்தனை விரியும்.கற்பனை பெருகும்.
அதுவே அறிவின் ஒளி.

===========================================================