வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

சோளத்தட்டை நாயகர்கள்

 சோளத்தட்டை நாயகர்கள்

_________________________________________

ருத்ரா



தொந்தரவு செய்யவேண்டுமென்றால்

ஒரு சக்கரநாற்காலியில் தான்

உட்காரவேண்டுமா?

பகல் வேஷங்களின் அரிதாரங்கள்

கையில் இருக்கும் போது

நாயாகவோ நரியாகவோ

இல்லை முடைநாற்றம் வீசும்

கழுதைப்புலியாகவோ இருந்து

இந்த மக்களைத்

துவைத்துக்காயப்போடலாமே.

யாவாராயினும் நா காக்க..

சொன்னது யாரு....?

ஓ அந்த ருத்திராட்சக்கொட்டை அணிந்த

சன்யாசியா  என்று

கன்னத்தில் போட்டுக்கொள்ளும்

இந்த கள்ள பக்திக்காரருக்கு

அக்கிரகாரங்களே அரசியல் சாசனங்கள்.

மனித உடலின் விஞ்ஞானம் மறந்து

பேசுகிறாரே.

மனித உடல் முழுதும் ஒத்துழைக்காமல் 

நின்றுகொண்ட போது

அறிவு மட்டும்

அந்த ஸ்டீஃபன் ஹாக்கின்ங்ஸ் ஐ

இந்த விஞ்ஞான உலகிற்கே

சக்கரவர்த்தி ஆக்கியது

ஒரு சக்கரநாற்காலியில் அவரை உட்காரவைத்து.

தாழ்நிலை மக்களின்

உயரத்தை இமயத்துக்கே கொண்டுசென்ற‌

திராவிடத்தின்

அந்த சக்கரநாற்காலியின்

சிறு "ஸ்க்ரு" கூட 

இப்படி மனிதநேயம் கழன்ற உங்களை

"மறை கழன்றவர்" என்று

கை கொட்டிச்சிரிக்கும்.

உலக நாயகன் என்று 

ஒரு மகுடம் செய்து கொடுத்தார்களே

இல்லை அது

"உலக்கை நாயகன்" தான்

என்று தடித்த வார்த்தைகளின் 

ஜிகினா நாயகனாக 

வலம் வந்து கொண்டேயிருங்கள்.

கோமாளிகளின் கூட்டணி

ஒரு சோளத்தட்டை நாற்காலியை

உங்களுக்கு தொங்க விட்டுக்கொண்டிருக்கிறது.

அதோ பாருங்கள்.

அங்கே ஓடுங்கள்.


_______________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக