சனி, 13 பிப்ரவரி, 2021

அந்த தீ ஒலிக்கிறது.

 




நாமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்

கி பி ரெண்டாயிரம் ஆண்டுகளாய்

நம் தமிழைத் தொலைத்துவிட்டோம் என்று.

அப்படி புலம்பினோம்

ஒரு பக்தி இலக்கியக்கடலில்.

அது பக்தி அல்ல.

அது ஒரு வித பயம் அல்லது

நமக்கு நாமே அச்சுறுத்திக்கொண்ட

ஒரு பூச்சண்டித்தனம்

என்று கண்டுபிடித்தோம்.

என் செய்வது தமிழா?

இன்றும் நம் தோளில் அந்த பூதம்.

இதைத்தான் காட்டுமிராண்டித்தனம் என்று

பகுத்தறிவின்

அந்த வேண்தேடி வேந்தன் 

அடித்து விரட்டச்சொல்லி

ஒரு கைத்தடி கொடுத்தான்.

தமிழா!

அந்த குடுமி வைத்த பூதம்

மந்திர உச்சரிப்புகள் பல சொல்லி

உன்னை மல்லாத்திக்கொண்டிருக்கிறதே.

"மல்"ஆண்ட பரம்பரை நீ

உன் தமிழின்

சொல் ஒலி இழந்து கிடப்ப‌தோ?

வீறு கொள்!

விழித்துக்கொள்!


___________________________________

ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக