ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

ரணம் சொட்டும் தோரணங்கள்?

ரணம் சொட்டும் தோரணங்கள்?

_________________________________________ருத்ரா



காதலர் தினம் என்றால்

இங்கே உள்ள

இருண்ட கண்டத்துக்குரல்கள்

குரைத்துத் தள்ளுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே

"கந்தர்வ மணம்" என்று

சொல்லி

பெண்ணைத் தவிக்க விட்டு

கரு கொடுத்து விட்டுப்போன‌

கந்தல் புராணங்கள்

எத்தனை?எத்தனை?

கடலில  படுத்துக்கிடந்து

பக்திப் பாய் விரிக்கும்

பரந்தாமனுக்கும்

இடப்புறம் ஒன்று வலப்புறம் ஒன்று

நடுப்புறம் நெஞ்சில் ஒன்று

என்று காதல் பொங்க மனைவியர்

எத்தனை? எத்தனை?

யுகங்கள் கடந்த போதும்

இந்த காலங்கள் தோற்றுப்போனது

ஒன்றே ஒன்று தான்.

அது தான் காதல்!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தேயும்

இந்த மூச்சுக்குமிழிகளில் 

முத்தெடுத்தவன் தமிழன்.

அவன் 

ஓலைத்துடிப்புகளில் எல்லாம்

இந்த தேன் சொட்டுகள் தான்.

இந்த மின் வெட்டுகள் தான்.

இந்த கல்வெட்டுகள் தான்.

அவை காதலின் கனல் பரிமாணங்கள்.

ஆனால் 

அதற்கும் ஒரு முக கவ‌சம் இட்டு

பக்தியிலும் பஜனையிலும்

பெண்களை நிர்வாணப்படுத்தியாவது

லீலைகள் புரிந்து

அதை சூட்சும அடையாளமாய் சொல்லி

மோட்சத்தையும்

நிர்குண பிரம்மத்தையும்

புல்லரிக்கும்படி புல்லாங்குழல்

ஊதும் உங்கள் ஊதைக்காற்று தானே

இன்று

இளசுகளை

மயக்கம் கொள்ள வைக்கிறது.

இருந்தாலும்

இந்த புதிய தலைமுறை

புதிய சமுதாயத்தின்

விடியல் விளிம்பில் நின்று கொண்டு

இந்த உணர்ச்சிப்பீலிகளை

"ஃபீல்"பண்ணுகின்றன.

இதற்கா இங்கே

எதிர்ப்பாய் இத்தனை

ரணம் சொட்டும் தோரணங்கள்?

____________________________________________________

https://www.thehindu.com/news/national/karnataka/ban-valentines-day-celebrations/article33825628.ece

___________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக