செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பீலி

 பீலி

_________________________________ருத்ரா


பீலிபெய்ச் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

எத்தனை வகுப்புகள்?

அந்த குறள் எனக்கு

பிடி படவே இல்லை!

ஆனால்

மெல்லிதினும் மெலிதான‌

உன் ஒரு பார்வையில்

என் அச்சு முறிந்து ஒரு

மாயமான ஆனால் இன்பமான‌

பாதாளத்தில் அல்லவா

வீழ்ந்து கிடக்கின்றேன்.

வள்ளுவன் சொன்ன சுமை புரிந்தது.

அந்த இன்பச்சுமை

ஆயிரம் உலகங்களின் 

கனபரிமாணம்!

__________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக