செவ்வாய், 26 ஜூலை, 2016

காதல் இல்லாமல்......




காதல் இல்லாமல்......
==================================================ருத்ரா
என்ன சொல்லி
உன்னைக்காதலிக்க கண்ணே!
இந்த வார்த்தைகளுக்கெல்லாம்
துரு பிடித்து விட்டது.
வர்ணனைகள் எல்லாம்
சாயம் இழந்து
வெளுத்துப்போய் விட்டன.
அம்பிகாபதி அமராவதி
அனார்கலி சலீம்
இவர்களெல்லாம்
இன்னும் நம்
உதடுகளில்
உலவிக்கொண்டிருந்தாலும்
அவர்கள் எல்லாம்
காதலுக்காக சாதலை சந்தித்தவர்கள்.
சாவதற்காகவா காதலிக்க வேண்டும்.
எரிமலைக்கவிஞன் பாரதி கூட‌
கனத்த சோகத்தை
காறி உமிழ்ந்தானே இப்படி...
"காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்".......
வேண்டாம் அந்த "சொல்"
இதோ அவள் அருகில் வந்து விட்டாள்.
"வா..வா..வந்து விட்டாயா?
அது வந்து...
உன்னை நான் மிகவும் விரும்புகிறேன்.
அதோ அந்த தென்னை மரத்து
தூக்கணாங்குக்குருவிக்கூட்டுக்குள்
குருவிகளைப்போல‌
ஆசையோடு அன்போடு
அடைந்து கொள்வோம்.
நாம் மணம் புரிந்துகொள்ளலாமா?"
"ஏண்டா லூசு
இதச்சொல்லத்தான் கூப்டியா?
அப்புறம்
என்னை நீ காதலிக்கலையா?"
அவள் கேள்வியில்
அவன் குழம்பினான்.
"காதல் இல்லாமல் காதலிப்பதா?"
இதற்கு விடை காண‌
அந்த முருங்கை மரத்து
வேதாளத்தையும் விக்கிரமாதித்தனையும் தான்
தேடிப் போகவேண்டும்!

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக