புதன், 3 பிப்ரவரி, 2016

தனிமை தருணங்கள்





தனிமை தருணங்கள்
==================================================
ருத்ரா இ.பரமசிவன்

என் தனிமை தருணங்களை
வாழ்வின் அழுக்குகளிலிருந்து
சலவை செய்யும் ஆறு இது.
இந்த பச்சைப் புல்வெளி
அமைதியை
அந்த நீண்ட நிழல்களில்
இலைச்சருகுகளில்
பிய்ந்து ஒழுகும்
வானத்தின் நீலப்பிதுங்கல்களில்
காட்டாறு ஆக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மன வர்ணங்களுக்கு
மீண்டும் வர்ணம் அடித்துக்கொள்கிறேன்.
நான்
நரை வெளுப்பை கருப்பில்
டை அடித்துக்கொள்வ‌தில்லை.
என் மனக்குகையின் 
அஜந்தா ஓவியங்களுக்கு
வர்ணம் பூசிக்கொள்ள‌
இந்த பூங்கா போதும்.
காலடியில்
பச்சை லாவா ஒன்று
தக தகவென்று பாய்ந்து
யாரும் படிக்காத‌
ஒரு கவிதையாக்கி
இங்கே வீசியிருக்கிறது.

==========================================================

(இடம்...கலிஃபோரினியா ..ஸான் ஓஸேயின் ஒரு ஒதுக்குப்புறமான மௌனப்பூங்கா!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக