சனி, 27 பிப்ரவரி, 2016

தூரிகைமரங்கள்






தூரிகைமரங்கள்
========================================ருத்ரா இ.பரமசிவன்
அந்தி கவிகின்ற நேரம்.
பகல் பொழுத்து
கொறித்து விட்டு போட்ட
சுண்டல் பொட்டலங்களின்
காகித கசங்கல்களாய் மனிதர்கள்.
டாலர்கள் ஆனாலும்
ரூபாய்கள் ஆனாலும்
அவற்றின் வியர்வை வழியல்களும்
ரத்த சதை நரம்போட்டங்களும்
ஒரே நீரோட்டமாய் தான்
கரன்சிகளில் ஓடுகின்றன.
கலிபோர்னியாவில் ஒரு பூங்கா.
குழந்தைகள்
உற்சாக சிறகு முளைத்து
பறந்து பறந்து
விளையாடிக்கொண்டிருந்தனர்.
சோடிய விளக்கின் முண்டைக்கண்கள்
வெளிச்சத்தை  சுகமாய்க்கசிந்தன.
தூரத்து தூரிகை மரங்களாய்
பாம் ட்ரீஸ் மிக அழகு.
அவை அந்த நீலப்படுதா எனும்
கேன்வாஸில்
எதையோ வரைந்து கொண்டே இருப்பதாய்
எனக்கு ஒரு பிரம்மை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக