வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

முள்ளில் ரோஜா



முள்ளில் ரோஜா 
========================================================
ருத்ரா இ.பரமசிவன் 

யாராவது ஓடிவாருங்களேன் 
மாட்டிக்கொண்ட 
என் கை கால் களை அவிழ்த்து விடுங்கள் 
பதஞ்சலி முனிவர் சொன்னார்  என்று 
 செய்து பார்த்தேன்.
வஜ்ர சூசிகா ஆசனமாம் 
கொண்டை ஊசியை சொருகுவது போல 
குண்டிலினியில் 
ஊடுருவி 
அப்படியே சஹஸ்ராரமாய் 
மேலே போய் 
அந்த ஆகாயப்பிரம்மத்தை 
நக்கிப்பார்த்துவிட ஆசை !
இந்த முள்ளுடம்பு பூராவும் ரோஜாக்காளாய் 
மாறிவிடுமாமே!
பாருங்கள்!
என் மனது எங்கே?
என் உடம்பு எங்கே?
என் "முள்"எலும்புகள் எங்கே ?
ஒன்றுமே தெரியவில்லை.
வாருங்கள் 
வந்து காப்பாற்றுங்கள்.
அந்த பாலைவனத்தில் 
அதன் குரலைக் கேட்பார் 
யாருமில்லை!
காற்றின் ஊளையொலி மட்டுமே கேட்டது!
அந்த ஒலிக்குள் 
பிளந்து கிடப்பது 
கேள்வியா ?
பதிலா ?

====================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக