வெள்ளி, 19 ஜனவரி, 2024

வாழ்த்து மடல்

 

"சங்கச்செம்மல்" விருது பெறும்

பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர்

ப.பாண்டியராஜா அவர்களுக்கு

ஒரு வாழ்த்து மடல்

----------------‐---------------------------------------

சொற்கீரன்.



சங்கத்தமிழா?

அப்படியும் ஒரு தமிழ் இருக்கிறதா?

என்று

தமிழனின் வரலாற்று மிச்ச சொச்சம்

ஒரு இருளில் மண்டிக்கிடக்கும் போது

மின்னல் வெட்டாய்

தங்கள் "தொடரடைவுகள்" எனும்

படைப்புகள் மூலம்

பேரொளி பாய்ச்சிய

தமிழ்ஞாயிறே!

எங்கள் நெஞ்சங்களில்

தமிழின் ஆயிரம் இமயங்கள்

விம்மிப் புடைக்கும்

ஒரு பெருமிதத்தை

நல்கி விட்டீர்களே!

நன்றி நன்றி 

கோடி நன்றி தங்களுக்கு! 

அந்த பனை ஓலைக‌ளி‌ல்

புதைந்து கிடந்த

தமிழின் 

"கிம்பர்லி"வைரங்களை 

சுடர் விடும்படி எங்களுக்கு 

தந்து விட்டீர்கள்.

இல்லாவிட்டால் நா‌ங்க‌ள் அ‌ந்த 

கூச்சல் மொழி ஈசல்கள் போல 

இறகு உரிந்து கிடப்போம்.

மீட்டுத்  தந்தீர்கள் உயர் 

வானத்து    நம் செந்தமிழை !

-------------------------------------------------




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக