செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நூலகம்

நூலகம்

-------------------------------


அட்டை 

போட்டுக்கொண்டு

சட்டை மாட்டிய புத்தகங்கள்

வரலாறுகளாய்

நெளிந்தோடின.

விஞ்ஞானங்கள் 

பொய்த்தோல் உரித்து

உண்மையின்

இமைகள் விரித்தன.

புராணங்கள் எனும்

அம்புலிமாமாக் கதைகள்

ஆயிரம் குவிந்து கிடக்கட்டும்.

ஆங்காங்கே மூலைகளில்

சாதி மத "நூலாம்படைகள்"

படிந்து கிடந்த போதும்

படிக்கப்படவேண்டும்

புத்தகங்கள்.

அந்த இண்டு இடுக்குகள்

எல்லாம்

அறிவின் ஆவேச

சுநாமிகளால்

துழாவி துழாவி

அடித்துச் செல்லப்படட்டும்.

மானுடத்தின்

கூர் அறிவு எல்லா

இருட்டுச்சிப்பங்களையும்

அழித்தொழிக்கட்டும்.

சிந்தனைச்சுடர்கள்

ஓங்கித்தெறிக்கட்டும்.

---------------------------------------------

ருத்ரா.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக