வெள்ளி, 8 மார்ச், 2024

முதல் கல்.

முதல் கல்

-------------------------------------ருத்ரா 


பாவம் செய்த அவள் மீது 

முதல் கல் எறிய 

யாராவது பாவம் செய்யாதவன் 

முன்னே வரட்டும்.

கடவுள் கட்டளை இட்டார்.

யாரும் முன் வரவில்லை.

கனத்த மவுனம் தான் நீடித்தது.

திடீரென்று 

அவர் நெற்றியில் 

ஒரு கல் எறிய பட்டது.

ரத்தம் வழிந்தது.

பாவத்தை படைத்தவன் மீது 

அந்த பாவமே 

கல் எறிந்து கொண்டது.

சிரித்துக் கொண்டே 

அவர் நடக்கத் தொடங்கினார்.

----------------------------------------------------









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக