வியாழன், 18 ஏப்ரல், 2024

ஏராளம்...ஏராளம்!



தினம் தினம் அது
புதிய வானம்.
புதிய பூமி.
இதை
நாம் தினம் தினம்
சோப்பு போட்டுக் குளித்து
கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால் அது
சோப்பு அல்ல.
அழுக்கு.
கனவு.
கண்ணீர்.
ஆசைகள்.
அவலங்கள்.
வாழ வேண்டும்
அல்லது
சாக வேண்டும்
என்ற வெறி.
மனிதன்
சக மனிதன்
அன்பு..மனிதம்
புழு பூச்சிகள்
எல்லாம் ஒன்று தான்
என்ற
கானல் நீர்ப்படகுகள்
நம் கைவசம்
ஏராளம் ஏராளம்!
......................
.................
........................
----------------------------------
சேயோன்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக