ஞாயிறு, 24 டிசம்பர், 2023

காத்திருக்கிறார்கள்.

 


வானம் 

தன்னைக் கிழித்து

வாசல் திறந்து

கட்டளை தந்தது.

இவர்களோ 

பொன்னைத் தேடி

சிதறி ஓடினார்கள்.

உருண்டு திரண்ட 

தூய்மை அன்பு

மாட்டுக் கொட்டிலில்

மலர்ந்து சிரித்தது.

மனிதம் பூத்து

புன்னகை புதிதாய்

மொழி பெயர்த்தது. 

அப்போதும் இவர்களுக்கு

அர்த்தம் புரியவில்லை. 

முள்முடி சூட்டி

சிலுவை ஏற்றி

மார்பிலும் 

ஆணிகள் அடித்து.....

வெறி இன்னும்

தணியவில்லை.

"மனித நேயமா

பேசுகிறாய்?" என

ஆணியும் சுத்தியலுமாய்

அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் என்ற பெயரில்

மானிடமே இங்கு

வலுத்திடுமோ என்று

ஏவுகணைகளால்

இந்த உலகை நிரப்பி

கடவுளைக்கூட

தவிடு பொடியாக்க

காத்திருக்கிறார்கள்

இவர்கள் 

காத்திருக்கிறார்கள்.

---------------------------------------

ஊழிமுதல்வன்





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக