செவ்வாய், 12 டிசம்பர், 2023

தூங்குமூஞ்சி மரங்கள்.

 

யார் சொன்னது?

அந்த தூங்குமூஞ்சி மரங்கள்

தூங்கிக்கொண்டிருக்கின்றன

என்று.

அந்த சாலைத்தூசிகளின்

குளியலில்

இரைச்சல்கள் சோப்பு தேய்க்க

நகர்வுகளும் நிகழ்வுகளும்

நிழல்களாய் 

பல்லக்கு தூக்க 

ஏதோ ஒரு வரலாறு

எச்சமிட்டுக்கொண்டே செல்கிறது.

மவுனத்தின் இந்த

தூக்குமரங்களிலா உங்களுக்கு

தஞ்சம் என்று

இந்த தூங்குமூஞ்சி மரங்கள்

கூக்குரலிடுவது கேட்கவில்லையா?

------------------------------------------------------

ருத்ரா.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக