ஞாயிறு, 29 அக்டோபர், 2023

மருதமரங்களே!




மருத மரங்களே!

ஆற்றின் நீர்க்கண்ணாடியில் 

முகம் பார்த்து 

ஒப்பனை செய்து கொண்டிருக்கும் 

உங்கள் மவுன  தருணங்களில் 

அந்த தாமிரபரணி

கிசு கிசுத்தது என்ன? 

பாபநாசத்து படித்துறைகளில்

கால் நனைத்தபோது

முண்டக்கண்ணின் பருத்த மீன்கள்

உயரத்து மருத மரத்தின்

மினுமினுத்த இலைக்கொளுந்துகளுக்கு

முத்தமிட ஏங்கினவே.

இயற்கை எழிலின் ஹோலோகிராஃபியில்

பரிமாணங்கள் களவு போயின.

--------------------------------------------------------------
சொற்கீரன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக