வெள்ளி, 20 அக்டோபர், 2023

ஓ! மனிதா!

ஓ! மனிதா!

இந்த பிரமாண்ட குப்பைத்தொட்டியா 

உன் கோவில்?

இதற்குள்

குப்பையாக நீ   கொட்டுவது 

வெறி தீட்டிய கனவுகளை....

கசாப்பு செய்த மனிதத்தை...

துப்பாக்கிகளை நீ பத்திரமாக 

வைத்துக்கொண்டு 

அவை துப்பிய உயிர் அமுதங்களை ...

இன்னமும் வரவில்லை 

உன் கடவுள்கள் என்று 

எண்ணிக் கொண்டிருக்கிறாய்.

என் கடவுள் த‌விர 

வேறு கடவுள் எதுவுமில்லை.

அப்படி சொல்லும் அசிங்கங்களை 

துப்பாக்கியால் துடைத்து 

இனத்தூய்மை செய்து 

பிணக் குவியல்களால் 

வரலாறு நிரப்பப்படவா 

இத்தனை போர்?

பயங்கரமான 

காட்டுமிராண்டித் தனத்தையா

உன் கம்பியூட்டர்கள் 

இத்தனை நாளும் 

கருத்தரித்துக் கொண்டிருந்தன?

----------------------------------------------

ருத்ரா.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக