திங்கள், 16 அக்டோபர், 2023

எங்கோ ஒளிந்து கொண்டார்..

ஒரு கடவுள் 

எங்கோ ஒளிந்து கொண்டார். 

வந்த கடவுளிடம் 

நீ தான் அவரா என்று 

கேட்டார்கள்.

அவரும் " இறை சான்றிதழ் "

நீட்டினார்.

இப்படியே 

சான்றிதழ்களை காட்டி காட்டி 

கடவுள்களும் வந்தார்கள். 

எல்லாம் சந்தை  இரைச்சல் ஆனது.

நான் தான் கடவுளின் 

கபாலம் வழியே வந்தவன் 

மற்றவர்கள் எல்லாம்

என் காலடி கீழ்

என்றான் ஒருவன். 

சாதிகள் ஆயிரம் பிரித்து 

அடிமை விலங்குகள் பூட்டி 

இரைச்சல் மந்திரங்கள் முழங்கினான் .

மனிதம் நசுக்கப்படும் 

கண்ணீரும் அவலமும் 

கானல் நீர் சொர்க்கம் நோக்கி 

மூழ்கிக்கிடந்தன.

கடவுள்கள் கடவுள்கள் 

எங்கு பார்த்தாலும் கடவுள்கள் .

மனிதர்களை காணவில்லை 

துப்பாக்கிகள் துப்பிய  மரணங்களில் 

இன்னும் இன்னும் 

கடவுள்கள் தான் 

முளை விட்டுக் கொண்டிருக்கின்றனர் .

---------------------------------------------------------

செங்கீரன்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக