திங்கள், 27 ஜூன், 2016

அந்த பசிபிக் கடலோரம்...

















அந்த பசிபிக் கடலோரம்...
=============================ருத்ரா

என் மௌனத்தை
நக்கிப்பார்க்க‌
ஆயிரக்கணக்கான
சதுரமைல்களில்
அகன்றதொரு கடல் நாக்கு..
அதன் நீலத்தில்
மிடைந்த அலைகள்
வாரிச்சுருட்டியதில்
கனவு வர்ணங்கள்
தின்னப்பட்டன.
மணல் பிதுங்கிய
கரை மேனியில்
நிழல் பின்னலில்
நான் திறந்து வைத்தேன்
என் ஜன்னலை.
சூரிய வெள்ளி உருகி
வார்த்ததில்
அவள் கொத்து நடைக்கு
கொலுசு மணிகள் போதவில்லை.
எத்தனை
காலடிகள்..?
அந்த ஒலிப்பிஞ்சுகளில்
நைந்து நைந்து
உற்றுக்கேட்கிறேன்.
மணல் துளிக்குள்
அவள் சிரிப்பின்
சிலிகன் சித்திரங்கள்!
கோடிக்கணக்கான டாலர்களை
கொட்டிவைத்தாற்போன்ற
இந்த குவியலுக்குள்
உலகம்
விளையாடிக்கொள்ளட்டும்
மாயப்பொருளாதாரத்தை.
என் சிந்தனை விரல்கள்
அமைதியை அளைந்து அளைந்து
கிச்சு கிச்சு தாம்பாளம் ஆடுகின்றன.
என் விரல்நுனிகளில்
இதயத்தை மாட்டியிருக்கிறேன்.
அவள் சிரிப்பு
அதில் வருடும் வரை
இந்த மணல் கூட்டமே
என் மனக்கூட்டம்.

================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக