திங்கள், 27 ஜூன், 2016

"புல்லை நகையுறுத்தி..."




"புல்லை நகையுறுத்தி..."
=========================================ருத்ரா

என்னை நெருங்கியது அது!
இடைவெளி
சிறுத்துக்கொண்டே
புள்ளியிலும் புள்ளியாய்...
இன்னும் என்
ஏணி ஏற்றங்களும்
பாம்பு ஆட்டங்களும்
ஓயவில்லை.
அவநம்பிக்கையின் வாய்ப்பிடியில்
அதன் நாக்குச்சுருட்டலில்
தேன் தீவுகள்
நம்பிக்கை விழுதாய்..
என் கோரிக்கைப்பட்டியல்
நீண்டு அதன் படிக்கட்டில்
உட்கார்ந்து உட்கார்ந்து
வைகுண்டமும் கைலாசமும்
கனவின் கணிப்பொறியில்
கிராஃபிக்ஸ் வரைகின்றன.
பேரனுக்கு பேரனுக்கு..பேரனுக்கு
பேரன்களின்
பூணூல் கல்யாணங்களும்
சாந்தி முகூர்த்தங்களும்
பாக்கி இருக்கின்றனவே!
பூக்களும் பட்டாம்பூச்சிகளும்
புதிது புதிதாய்
புருஷ சூக்தங்களுக்கு
சுருதிகள் குதப்புகின்றனவே.
காற்று வடிகட்டிய வேதங்களில்
எப்படி இத்தனை
மனிதக்கழிவுகள்?
நற நறப்புகளும்
குடல் கிழிப்புகளும்
அவதாரங்கள் கோரைப்பற்காட்டில்
அல்காரிதம் தர‌
மண்டை வீங்கிய மனிதன்
அண்ட்ராய்டுகளில்
கருடபுராணக்கிருமிப்போஜனத்துக்கு
பந்தி விரித்து கிடக்கிறான்.
மனிதனைப் பார்த்து
மனிதன்
ஒரு முறுவல் போதும்.
இந்த சூலாயுதங்களும்
கபால எலும்புக்குவியல்களும்
பூங்காலைக்கு
புத்திதழ் திறக்குமே.
கேவலம்
பச்சைப்புல் கொடுக்கும்
முத்தங்களில்
சூரியன் எச்சில் பட்டு
எங்கும் அமுத பிழம்பு
எழுந்து சுடருமே!
எழுத்துக்களின்
நீண்ட வாக்கியங்களும் சொற்களும்
உயிர்ப்புக்காகத்தான்
காத்திருக்கின்றன‌.
நம் அச்சங்களும்
அதன் மிச்சங்களும் இனி
பொசுங்கிப்போகட்டும்.
தூக்கி எறி
அந்த முரட்டுப்போர்வைகளை!
மெல்லிய இமையோரம்
பாரதி பாடுகின்றான்..
"புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி..."

==============================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக