புதன், 29 ஜூன், 2016

"மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்"








"மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்"
==============================================ருத்ரா

அந்த
சிறுகூடல்பட்டிக்கவிஞனின்
மனம் நிறைய நம்பிக்கைகள்.
கண்ணதாசன் என்று
கண்ணனிடம் சொன்னால்
கண்ணன் சொல்வான்
கண்ணன் இவனுக்கு தாசன் என்று.
இவன் கவிதைகளில்
கடல்கள் புல்லாங்குழல்.
வரிகள் அத்தனையும்
மனம் வருடும் மயிற்பீலிகள்.
சொற்கள் தோறும்
கவலை துரத்திய‌
ராதைகளின் பிருந்தாவனங்கள்.
குடியிருந்தது "கோப்பை" என்றாலும்
அது இன் தமிழ்க்கோட்டை.
கடைசிவரை
தன் சட்டைப்பையிலிருந்து
அந்த‌
"கம்யூனிசத்தை" எடுக்கவே இல்லை.
"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்"
என்று
கருப்புப்பணத்தின்
சாக்கடைக்கருப்பை
பேனாவுக்குள் ஊற்றிகொடுத்தான்
கோடம்பாக்கத்துக்கு!
இவர்கள் இன்னும்
கிருஷ்ணனின் கருப்புக்கே
பஜனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவன் "கருப்பை" ஊறிய‌
கவிதைகள் எல்லாம்
மரணத்தை பால் குடித்தே வளர்ந்தன.
அதனால் தான்
அந்தக் கண்ணதாசனுக்கு
மரணமே இல்லை.
"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்"
அவனது
அர்த்தமுள்ள இந்து மதத்தில்
அகராதியே
இந்த மனிதன் தான்.
எல்லோரும் சொன்னார்கள்
அவன்
இறைவனை
தன் எழுத்துக்களில்
பச்சைகுத்திக்கொண்டான் என்று.
ஆம்
கடவுளே தன்
கன்னிக்குடம் உடைத்துக்கொண்டது..அவன்
க‌ன்னித்தமிழில் தான்.

=============================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக