சனி, 12 டிசம்பர், 2015

ஓ! பாரதி!




ஓ! பாரதி!
______________________________________________ருத்ரா இ.பரமசிவன்

கார்ட்டுன் தூரிகை
உன் மீசையை வரைந்த போது
தீப்பற்றிக்கொண்டது.

____________________________________

உன் முண்டாசு வடிவில்
உனக்கு
இவர்கள் ஒரு மண்டபம் கட்டலாம்.
உன் முகமோ வெளியில் அல்லவா
இருக்கிறது.
நூத்திமுப்பது கோடி இந்திய முகங்களில்!

____________________________________________

தாயின்   MONEYக்கொடியின்
தொப்பூள் கொடி
ஸ்விஸ் பாங்க் லாக்கர்களில்.

_______________________________________________


சுதந்திர தாகம் என்று
சொல்லிவிட்டுப்போனாய்.
எப்போது நொறுக்கப்படும் என்று
தெரியவில்லை...
இந்த பாட்டில்கள்.

_______________________________________________


எரிதழல் கொண்டுவா என்றானே
உன் பீமன்.
பங்கு மூலதன‌ச்சொக்கட்டானில்
இன்னும் இந்த
பாரத புத்திரர்கள்
பாத்திரம் ஏந்திக்கொண்டிருக்கலாமா?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________


எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.
மன்னர்களுக்கு
மலங்கழிக்கத்தான் ஒரு இடமில்லை.

__________________________________________________


ஒளி படைத்த கண்ணினாய்
வா வா... வா என்றார்கள்.
ஆனாலும் அதில் நீ
லாவா....வா என்று தான்
ஒலிக்கின்றாய்!

______________________________________________________






`

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக