வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌



ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌
==================================================================
ருத்ரா


"உன்னை என் நிழல் என்றோ
என்னை உன் நிழல் என்றோ
கூற முடியாது.
மண்ணும் விண்ணும்
ஒரே சமன்பாட்டில் வந்திருக்கிறது.
கொசு இஸ் ஈகுவல் டு அந்துப்பூச்சி கரப்பான்பூச்சி ஸ்குவேர்
என்று
இ இஸ் ஈக்குவல் டு எம் சி ஸ்குவேர் போல‌
கூறிக்கொள்ளலாம்.
உயிரை 
இவர்கள் கடைந்து கடைந்து பார்த்தும்
அதிலிருந்து
இன்னும்
ஆத்மா வெண்ணையை எடுக்கமுடியவில்லை.
காற்றின் இடைவெளிக்கும்
பிளந்து பார்த்தும் 
ஆத்மா தெரியவில்லை."

இரண்டும்
தன் காதுகளில் மொய்த்த ஈக்களை
விரட்ட‌
கொம்பை கொம்பை ஆட்டின.
வயதுகளின் மூப்பில்
இரண்டும்
எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டன!
வீட்டுக்காரன் 
எப்போதோ சொல்லிஅனுப்பி விட்டான்
இன்னும் அவர்கள் வரவில்லை

"அது சரி!
அத்வைதம் கூட‌
ஒரு யுனிஃபிகேஷன் தியரி தான் என்று
என்று
இங்கே வந்த ஒரு பெரியவர் பேசினாரே.
அவர் ரிட்டயர்டு  ஃஃபிஸிக்ஸ் ப்ரொஃபெசராமே!
அப்போ
மாட்டின் (பசு) பிறப்பு உறுப்பு 
லெட்சுமி என்று 
கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள்.
மனிதர்களில் பெண்களின் 
பிறப்பு மூலமான கர்ப்பகிருகங்கள் மட்டும்
எப்படி நரக வாசல்கள் ஆயிற்று?
தோ...பாரு ரொம்பப் பேசாதே"
..............

...........

அவர்கள் வந்து விட்டனர்.
கொம்புகளை சிலுப்பினாலும் விடவில்லை.
லாரிகளில்
அவை எங்கோ சென்றன.
அவற்றின் இறைச்சியில்
அத்வைதம் இல்லை.
சிவனை கறிசோறு ஆக்கி விட்டு
லெட்சுமியை மட்டும் காப்பாற்ற‌
இவர்கள் 
கசாப்பு கத்தியை உயர்த்தினார்கள்.
மனித இறைச்சி கிடைத்தது.
அந்த கத்தியும்
இறைச்சியும் 
கிசு கிசுத்துக்கொண்டன‌
"அத்வைதத்தை"

======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக