சனி, 19 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (2)



இது கிராஃபிக்ஸ் அல்ல.
==========================================ருத்ரா
(வெள்ளமோ வெள்ளம் (2)

தலைவிரித்த கூந்தல் போல்
இந்த வெள்ளம் க்ராஃபிக்ஸ் அல்ல.
இயற்கையின் மீது பழிபோடும்
செயற்கை பேரிடர் இது.
கொம்பு முளைத்து
கோரைப்பல்லில் ரத்தம் வழியும்
ஹாலிவுட் கணினிச்சித்திரம் அல்ல இது.
வெள்ளம்! வெள்ளம்! வெள்ளம்!
வைகுண்ட ஏகாதேசி சொர்க்க வாசல்
திறக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்
என்று
அந்த "செம்பரம்பாக்கம்" மதகுகளை
புறக்கணித்து
பள்ளி கொண்ட அலட்சியத்தின்
வெளிப்பாடா இது?
மொத்த சென்னையும்
மூழ்கிப்போகலாம் என எச்சரிக்கும்
கன மழையை
"ரமண" முனிவர் டிவியில்
சொல்லும்போது எல்லாம்
இவர்கள் ரிமோட் தட்டி
குத்தாட்டங்களிலும் சீரியல்களிலும்
குடி கொண்ட போது தான்
குடியைக்கெடுத்த
அந்த பிராளயம் நம்
மூக்கு நுனியில்
வந்து உட்கார்ந்து கொண்டது.
ரிமோட் அடுத்த பட்டன்
தட்டுவதற்குள்
வீட்டு உத்திரம் நம்
தலையை இடித்தது.
ஐயகோ!
தொலைக்காட்சிகளும்
தொலைந்தே போனது!

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக