சனி, 29 ஆகஸ்ட், 2015

குற்றாலம்




குற்றாலம்
==========================================ருத்ரா

 சிலுசிலுத்தது குற்றாலம்.
சிங்கன் சிங்கி கூத்து துவங்கியது
அந்த குத்துப்பாறைகளில்.

 அருவி
வேங்கையில் விழுந்து
வேங்கையை நனைத்தது.
முதலில் மரம்.
அப்புறம் புலி!

  நான்கு முழ இளஞ்சிவப்புத்துண்டில்
தொந்திகள் தொப்பைகள்.
சிக்ஸ் பேக்ஸ்ம் தான்.
மலையிலிருந்து அது
யாரோ எவளோ?
தலையை கோதிய சுகத்தில்
எவனுக்கு வேண்டும்?
எண்ணெயும் சீயக்காயும்.

 அருகே
கிளுகிளுக்கும் 
வளையல்காடுகளில்
"ஒலியும் ஒளியும்" தான்.

 மானம் இழந்து
மருட்சி உற்ற‌
மாணிக்க அருவி
சூரிய ஒளியில் தற்கொலை!
ஏழு வர்ண ரத்தம்!
=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக