சனி, 29 ஆகஸ்ட், 2015

கனவுக்குள் அகப்படவில்லை!

thoorikaikkaadukal.png
ருத்ரா





கனவுக்குள் அகப்படவில்லை!
================================================ருத்ரா


ஏன் அகப்படவே மாட்டேன் என்கிறான்?
இமைகளை அழுத்தியும்
மூடிப்பார்த்து விட்டேன்.
அன்னத்தூவிகளாலும்
மூடிப்பார்த்து விட்டேன்
ஏன் இன்னும் வரவில்லை?
சைக்டெலிக் நரம்புகளை
என் இமைகளில் ரங்கோலி
போட்டுக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு போய் தொலைந்தான்?
அந்த இரவின்
வெளிச்சதை பிழம்புக்குள்
விஞ்ஞானிகளின் டார்க் மேட்டரின்
இருட்பிண்டமாய்
இழைந்து கொண்டிருக்கிறானோ!
பெண்களின் தடிமான அமுதக்கவர்ச்சிகளை விடவும்
அந்த எம் தியரியின்
தலையணை புத்தகங்களோடு
அமுக்கிக்கொண்டு கிடப்பவனாயிற்றே!
ஏதாவது
காதல் வசனம் இரண்டு சொல்லடா
என்றால்
"ஏடிஎஸ்ஸும் ஹோலோக்ராஃபிக் பிரபஞ்சமும்"
என்று
விளக்கத்துவங்குவானே!
இருப்பினும் அவனை என்னால்
மறக்க முடியவில்லை.
அந்த சோடா புட்டி கண்ணாடிக்குள்
கூகிள்களை சுரங்கம் வெட்டி வைத்திருப்பவன்
அல்லவா!
அடியில் தீ எரியும்
உடல் புணர்ச்சிக்கு
பெர்ஃப்யூம் எழுத்துக்களால்
கிச்சு கிச்சு மூட்ட‌
இன்னும் ஏன் அவன்
கூகிளுக்குள் போகவில்லை?
இருப்பினும்
அவனை எனக்கு
ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
டேய்..
சீக்கிரம் வந்து கனவுகுழம்புக்குள்
கலக்கேண்டா!
வா!வா!...

 ...................
................

 "ஏண்டி காஃபி கலந்து கொண்டு வருவாய்
என நினச்சிட்டிருக்கேன்..
நீ இன்னும் எழுந்திருக்கவே இல்லை..
அடச்சீ..எழுதிந்திரு..
உன் "சோடா புட்டி"
உனக்காக வராண்டாவில்
வெகு நேரமாய் உட்கார்ந்திருக்கிறான்"

=================================================
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:02 கருத்துகள் இல்லை: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக