சனி, 4 நவம்பர், 2023

காணாமல் போயினர்

கடவுள்கள் 

தண்டனைகளை காட்டினார்கள் 

பலிகளைக் கேட்டார்கள் 

அதற்கு 

அன்பு என்றும் விசுவாசம் என்றும் 

அர்த்தம் சொன்னார்கள்.

வசனங்கள் ஆகும்  முன்

அவை 

துப்பாக்கிகளாகவும் 

கொத்துக்குண்டுகளாகவும் மாறின. 

மனிதம் கந்தலாகியதில் 

கடவுள்களும் காணாமல் போயினர்.

-----------------------------------------------------------

ருத்ரா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக