சனி, 9 ஜனவரி, 2021

அப்போது வாருங்கள்.

 


அப்போது வாருங்கள்.
----------------------
ருத்ரா.




நுரைப்பூக்கள் அள்ளி விளையாடும் 
திருச்செந்தூர் கடற்கரை இது.
நெளியும் அலைகள் 
வளையல்கள் கிலு கிலுக்கும் 
அவள் கைகளாய் 
கலித்தொகை பாடுகின்றது.
முகம் தெரியாத அவள் 
அகம் தெரிகின்றது.
எதிரே விரிந்த அந்த 
நீல வானத்தில்.
சிரிப்பும் சிதறுகிறது
அந்தி வனத்தின் நட்சத்திரப்பூக்களாய்.
இந்த எழுத்துக்களை 
இப்போது 
கைநிறைய அள்ளிக்கொள்கிறேன் 
அந்த 
கடல் நுரைகளை போல் !
இதைக்கொண்டு
செதுக்குவேன் அவளை!
அவள் உருவம் அகப்பட்டதும் 
சொல்லியனுப்புகிறேன் 
அப்போது வாருங்கள்.
கை  நிறைய  பூச்செண்டுகளுடன்.

------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக