புதன், 13 ஜனவரி, 2021

பொங்கலோ பொங்கல்

 



பொங்கலோ பொங்கல்

____________________________________ருத்ரா

இஞ்சி மஞ்சள் கரும்பு என‌

மூன்றும் தமிழின் இன்சுவை கூட்ட‌

கிழக்கைக் கிழித்து இருளைப்பிளந்து

விடியல் கீற்று வெளிச்சம் காட்டும்.

தமிழின் இதயம் கசக்கி 

கனவுகள் நசுக்கி 

மூழ்கடித்த வெறியர்களின் வாய்க்கால் அல்ல‌

அந்த முள்ளிவாய்க்கால்.

எரிதழல் தளும்பும் 

செங்கடல் விரிப்பே 

அஃதெனக் கொள்வம் 

பொங்கலோ பொங்கல்!

அறம் பிறழ்ந்த 

புல்லர்கள் காட்டிய

பொய் வரலாற்றை 

அறிவின் எரிமலை 

உமிழ்ந்து ஆங்கே

செவ்வொளி காட்டுவம்!

முழங்கிடு இன்று

பொங்கலோ பொங்கல்!

தமிழ்ப்புத்தாண்டு மலர்ந்தது இன்று!

அமிழ்தென முழங்குவம்

ந‌ம்

அகர முதல!..அம்

மகர விழியில்...புது

உலகம் காண்போம்.

வாழ்க தமிழ்!

வெல்க தமிழ்!


________________________________





 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக