புதன், 13 ஜனவரி, 2021

சிறகுகள்




சிறகுகள்

_______________________________ருத்ரா


இது நான் 1996ல் 

அமெரிக்காவில் ஒக்லஹோமா வின்

"ப்ரையார்"எனும் ஊரில்

என் மகனுடன் தங்கியிருந்த போது

கம்ப்யூட்டரில் வரைந்த ஓவியம்.


சிறகு விரித்து பறப்போமா?

விண்ணில் உயர எழுந்திடுவோமா?

என்னும் துடிப்பை

தேக்கி யிருக்கிறது அந்த வாத்து.

இதுவே நம் உலகத்தமிழனின் நிலை.

தமிழன் சிறகு விரித்தால்

அந்த சூரியனையே அடைகாத்து

குஞ்சு பொரித்து விடும்

ஆற்றல் உடையவன்.

பிரபஞ்சத்தின் "ஹிக்ஸ் போஸான்"

உட்கருவுக்குள்ளும்

நுழைந்து பார்த்து உண்மையின் 

அறிவை அளந்துவிடும்

அந்த குவாண்டதமிழன்

ஒரு என்டாங்கில் மூலம்

பிரபஞ்சத்தின்

எல்லா தூசு துரும்புகளையும்

தூரிகையாக்கி

ஓவியம் காட்டும் வல்லமை உடையவன்.

உலக மானிடத்துவமே 

அவன் கையில் வைத்திருக்கும்

ஒரு சிலேட்டுப்பலகை ஆகும்.

அதில் உள்ள வரிகளைப்பாருங்கள்.

படியுங்கள்.

ஆம் ..அது

"யாதும் ஊரே!யாவரும் கேளிர்!"

ஆம் அதை யாவரும் கேளீர்.


_____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக