புதன், 13 ஜனவரி, 2021

அலைப்பிழம்புகளில்...


 அலைப்பிழம்புகளில்...

____________________________________ருத்ரா



மணல் மேடிட்டு விட்டது.

வயதுகள் நிகழ்வுகள்

புதையுண்டன.

இந்த மணற்கடலில்

இன்னும் கேட்கிறேன்.

அவள் கொலுசு சத்தங்களை.

அந்த பரல்கள் உரசுவதில்

என் இதயத்துப் பூகம்பங்கள்

ரிக்டர் ஸ்கேல்களையெல்லாம்

அடித்து நொறுக்கி விட்டது.

கால் வேறு கை வேறு போல்

காங்கிரீட் சதைகள் முறுக்கிவிழுந்த‌

கட்டிட சிதலங்கள் போல்

கனவுகளின் வண்ணக்கண்ணாடி

நொறுங்கல்கள் போல்

இன்றும்

என் சோடாபுட்டிக்கண்ணாடி வழியே

அந்த் கலை டோஸ் சித்திரங்கள்

சுழற்றி சுழற்றி 

அவள் உதட்டுச்சுழிப்புகளில்

என்னைக் கிறங்கடிக்கின்றன.

என் கடைசி அத்தியாயங்களின் மேல்

அந்த கொள்ளி வறட்டிகளைக்கொண்டு

மூடுமுன்

நீலவானத்தின் பிதுங்கல் வழியே

என் கவிதையின் கடைசி வரியை

எழுதுகின்றேன்..

முற்றுப்புள்ளி வைக்காமல்..

முடிக்க மனமில்லாமல்..

தீ உமிழ்ந்த புகைச்சுருளில்

இன்னும்

அந்த மணல் பிழம்புகளின்

அலைகளாய்..பரவுகின்றேன்.


_______________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக