புதன், 9 ஆகஸ்ட், 2017

ஒரு கவுண்ட் டௌன்

ஒரு கவுண்ட் டௌன்
================================================ருத்ரா

சூபர்ஸ்டார் கட்சி ராகெட்டு திரியை
பற்ற வைக்க
கவுண்ட் டௌன் ஆரம்பித்து விட்டது
என‌
ஊடகங்கள்
ஊளையிட ஆரம்பித்து விட்டன.
கொடி ரெடி
சின்னம் ரெடி
கொள்கை தான்
மிக்ஸியில் ஓடிக்கொண்டிருக்கிறது
என்று
அமித்ஷா அறிவிப்பு செய்கிறார்.
ஒரு டிவியின் க‌ருத்துக்கணிப்போ
அவரது
"தனி வழியிஸம்"தான் என்று
குழல் ஊதி விட்டது.
கைவசம் பிரம்மாண்ட படங்கள் இருக்கும்போது
அவரால் மாநாடு பேட்டி அறிக்கை என்று
ஓடிக்கொண்டிருக்குமா?
அந்த ராக்கெட்
மேட் இன் "அமித்ஷா"பாக்கெட்டிலா?
மர்மம் அவிழும்போது தெரியும்.
திராவிடத்தை எதிர்த்து கட்சி தொடங்கியவர்கள் கூட‌
திராவிட"லேபில்" ஒட்டிக்கொண்டு தான்
வந்திருக்கிறார்கள்.
சிங்கத்தையும் கழுதையையும் "ஒட்டு" இனமாக்கி
ஒரு திராவிட பாஜக வை தூக்கி
இவர்மீது அவர்கள் ஏற்றினாலும் ஏற்றுவார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து
திராவிட உச்சரிப்புகளை
பினாயில் கொண்டு கழுவி சுத்தப்படுத்துவதாய்
"கங்கா ஜலம்"கொண்டு வரும்
அந்த காவிக்கூட்டத்தோடு
கூட்டணி வைக்க
சூப்பர்ஸ்டாரின் தனி வழியிசம்
ஒரு தடை கல் போடலாம்.
இமயமலை பாபா ஒன்றும்
பாபா ராம் தேவ் இல்லை!
இமயமலை பாபா அவரது மறைமுக‌
கல்பாக்கம்.
அது "ஆத்மீக கதிர்கள்" விரித்தாலும்
சமூக நீதிகளை மத வெறிகளை
வேரோடு அழிக்கும் அணுக்கதிர்கள் தான்
என்பது
அவரது ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும்
எதிரொலிக்கிறது.
இந்த கவுண்ட் டௌன்
ஒரு கட்சி ரிலீசுக்கா?
அல்லது ஒரு பட ரிலீசுக்கா?
தெரியவில்லை!
நாளை
அவர் கோட்டையில் ஆட்சி செய்தாலும்
சினிமாக்கொட்டகைகளில் தான்
மசோதாக்கள் "வெந்தெடுக்கப்படும்"
நிழல்கள் கற்கோட்டைகள் ஆகுமா?
பார்ப்போம்!

===================================================


நகைச்சுவை (34)

நகைச்சுவை (34)
=============================================ருத்ரா

செந்தில்

(அழும் குரலில்)

ஆதார அட்டையை அந்த அட்டையுடன் சேர்க்கலாம் ..இந்த அட்டையுடன் இணைக்கலாம்னு சொன்னாங்களேன்னு
நானும் ஒரு அட்டையில் ஆதார அட்டையை இணைத்துத்தாருங்கள்னு கேட்டேன்.மாட்டேனுட்டாங்க..(விக்கி விக்கி அழுகிறார்)

கவுண்டமணி

அழாதேடா கண்ணா! நான் இணைக்கச்சொல்லி வாங்கித்தாரேன்.
எந்த அட்டை டா?

செந்தில்

இந்த அட்டைதாண்ணே! (கையில் ஒரு ரத்தம் உறிஞ்சும் அட்டையை காட்டி நீட்டுகிறார். அது வளைந்து வளைந்து கையில்
உறிஞ்சும் இடம் பார்த்து நெளிகிறது!)

கவுண்டமணி

அய்யோ அம்மா! அத தூர எறிஞ்சுட்டுவாடா அட்டைத்தலையா.
(அவரும் பயந்து ஓடுகிறார்)

=================================================================

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

அண்ணே! அண்ணே!

அண்ணே! அண்ணே!
==================================================ருத்ரா

"ஏண்ணே! இப்ப நம்ம கைவசம் மூணு அணி இருக்கு.எந்த அணியிலே சேரலாம் சொல்லுங்கண்ணே"

"நமக்கு வர்ர "நலத்திட்டங்களப்பாத்து" முடிவெடுத்துற வேண்டியது தானே.ஒரு தடவைக்கு நூறு தடவை நல்லா யோசிச்சு முடிவு எடுப்பா."

"நூறு தடவை இல்லேண்ணே."கோடி" தடவை நெனச்சுப்பாத்தாச்சு.
மூணுலேயும் சேரவேண்டியது தான்."

"அது எப்படிடா?"

"ஒரு இடத்துல சேந்துட்டு..கொஞ்சம் இருங்கண்ணே! எனக்கு உடம்பு சரியில்ல! வைத்தியம் பாத்துட்டு வந்திர்ரேன்னு சொல்லிட்டு அங்க போயிற  வேண்டியது தான்.அப்புறம் அங்கே இருந்து தோ வந்திடரேண்ணே! "ஆத்தா குறி சொல்லப்பொறா! கோடங்கிக்காரக எல்லாம் வந்துட்டாக.என்னன்னு கேட்டுட்டு வந்திடரேண்ணேன்னு கெளம்பிற வேண்டியது தான்..."

"டேய்..டேய்..பாத்து பாத்து...உங்க தலைகளையெல்லாம் எண்ணி
கணக்கெடுக்க நினைச்சா "கவர்னரே" மயக்கம் போட்டு விழுந்துருவாரு.."

___________________________________________________________________
இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.






திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஓவியா

ஓவியா
=========================================ருத்ரா


கிராமங்களின்
கோவில் விழாக்களில்
நடைபெறும் துகிலுரி நடனங்களில்
பார்ப்பவர்கள் தங்கள்
ஆடைகளை களைந்து விட்டு
ஆடுவது போன்ற
ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள்.
இந்த விளிம்பு நிலை தான்
"பாம்பும் தடுக்கப்பட்ட பழமும்
உள்ள ஈடன் காடு".
இந்த உள்ளவியலின்
உள்ளாடைகளை களைந்து எறிய‌
மசாலாக்காடுகளில் ஒரு மகாத்மா
கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று
மயக்கம் அல்லது தொங்குநிலை போன்ற‌
ஹேலுசினேஷன்கள் மூலம்
தங்கள் ஹிட் ரேட்டை உயர்த்திக்கொள்ளும்
ஊடக விளையாட்டு இது.
ஆரவ் ஊட்டிய காதல் ரசம்...
அதில் ஓவியாவுக்கு ஏறிய பித்தம்.. என்று
அந்த நிழல்காட்டுக்குள்
ஆயிரம் நிழல்கள்.
நிழல்கள் காதலித்தன.
நிழல்கள் காமுற்றன.
நிழல்கள் தற்கொலை செய்ய துடித்தன..
மனிதன்
ரத்த சதைகளால் பின்னப்பட்ட போதும்
"போலித்தனங்களால்"
உயிர் பிசைந்து உரு  திரட்டப்பட்டிருக்கிறான்..
யோகா செய்தாலும் சரி!
பதஞ்சலியின் சமாதியை அடைந்தாலும் சரி!
அது வெறும் நிழல்.
அதன் உள்ளடக்கத்தை உரித்தபோதும்
அதுவும் நிழல் இழைகளால் தான்
நெய்யப்பட்டிருக்கிறது என்பது
ஒரு ஆழமான உளவியல் உண்மை.
அந்த நெருப்புக்குழம்பை வைத்து
மத்தாப்பு கொளுத்துவதே
ஓவியாவும் பிக் பாஸ்ஸும்!
நம் நிர்வாணத்தை நாமே ரசிப்பது போல்
"ஓ கல்கத்தா" எனும் நாடகம்
இங்கிலாந்தில் ஆண்டுக்கணக்கில்
அரங்கேறிக்கொண்டிருந்தது நாம் அறிவோம் .
தன் இடுப்பு "டப்பியில்"
என்ன வைத்திருக்கிறேன்
என்று தேடத்தொடங்கிய மனிதனின்
பச்சை ரத்த பானங்களே
இந்த நாடகங்கள்.
ரத்தம் கசியும் வரை
அவன் இப்படியே
பிறாண்டிக்கொண்டிருக்கட்டும்.
லேசர் ஒளிக்காட்டில்
ஆடும் வேட்டை இது.
ஆளும் பொய்.
அம்பும் பொய் .
உணர்சசிகளின் தினவுகளே
இங்கு  இந்த சின்னத்திரைப்படங்கள்.

==============================================








ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

உன் மனதோடு ஒரு "செல்ஃ பி "

உன் மனதோடு ஒரு "செல்ஃ பி "
==============================================ருத்ரா

என் நிழலை உமிழ்ந்தது
யார் அல்லது எது?
சன்னல் கதவுகளை
விரீர் என்று திறந்தேன்.
சூரியன் கன்னத்தில் அடித்தான்.
வெகு கோடி மடங்கு
வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே!
உன் கருவுக்குள்
விதை தூவியது யார்?
நாங்கள்
ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி
உன்னில்
ஜனித்ததாய்
கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான்
இருக்கிறோம்.
உன் அப்பன் யார் அற்பனே?
பிக் பேங்க் என்று
ஆயிரம் அயிரம் கோடி
ஆற்றல் பிசாசு
ஆவி கொடுத்து
உருட்டித்திரட்டி
உரு பிசைந்த அண்டத்தில்
உன் பிண்டம் பிடித்த‌
கை எது?
கேள்வியின் திரி
நீண்டு கொண்டே இருக்கிறது.
மனித மூளையின்
முடிச்சு மண்டலங்களில் கூட‌
விடை வெடிக்கலாம்.
பிக் பேங் திரைக்கும் பின்னே
ஒரு தூரிகை அசைகிறது.
அந்த சவ்வு ஓவியங்களில்
"டி ப்ரேன்" பிரபஞ்சங்கள்
தெருக்கூத்து நடத்துகிறது.
அந்த விஞ்ஞான அரிதாரங்களை பூசிக்கொள்
அறிவுப்பிழம்பே!
அவதாரங்களின் மூட்டைகளை
அவிழ்த்துப்பார்த்து
அஞ்ஞானித்தது போதும்.
போ!
இறைவன் தேடும் இரைச்சல்களை நிறுத்து!
இந்த நிழலின்
ஒளியைத்தேடி ஒளிக்குள் ஒளிந்து போ!
ஒளி உன்னை உறிஞ்சக்கொடு.
இது உன் மனதோடு
ஒரு"செல்ஃபி"
எடுத்துக்கொள்ளும் விளையாட்டு.
இந்த நிழல்களின்
இதயத்துடிப்புகள் அதோ
கேட்கிறது பார்.
ஆயிரமாயிரம் பிரபஞ்சங்களையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
செரிபரம் செரிபல்லம் எனும்
மண்டைக்கருவூலத்து
உன் நியூரான்களுக்குள்
கேட்கிறது பார்
உற்றுக்கேள்.

================================================

சனி, 5 ஆகஸ்ட், 2017

அழகே..அழகே..அழகே




அழகே..அழகே..அழகே
===================================ருத்ரா


அழகே
உன்னைப்பார்த்துகொண்டே தான்
இருக்கவேண்டும்.
இந்த பிரபஞ்சங்கள் குருடு ஆகும் வரை..
அந்த நெருப்பு பிழம்புகள்
குளிர்ந்த ரோஜாவின் குளிர்ந்த இதழ் ஆகும் வரை..
அழகே..அழகே..அழகே
இந்த சொல் எங்கும் தூவிக்கிடக்கிறது.
மனித உயிர்கள் எனும் மின்சாரப்பூக்களின்
பரவசக்கடலின் திவலைகள் தோறும்
அழகே..அழகே..அழகே
உன் எலக்ட்ரான் ப்ரொடான் நியூட்ரான் கோர்வைகள் தான்
சடை பின்னிக்கொண்டிருக்கின்றன.
அழகின் இந்த விஞ்ஞானம் சொல்லும்
குவாண்டம் மெகானிக்ஸிலும் கூட‌
அழகும் அழகும் தான்
ஒளிந்து விளையாடுகின்றன.
அழகே
நீயும் கூட ஒரு
குவாண்டம் என்டாங்க்லிங் தான்.
கண்களாலும் சரி
எந்தக் கவிதைகளாலும் கூட‌
உன்னைப்பிடிக்கமுடியாது.
ஆனால் ...இங்கு எல்லாம்
உன் பிடிக்குள் தான்.
அழகே..அழகே..அழகே
நீ வாழ்க!
வாழ்க வாழ்கவே!!

================================================



செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மூன்று பொம்மைகள்

மூன்று பொம்மைகள்
________________________________________________ருத்ரா


பெரிய பெரிய ஆட்களின் மேசையில்
அந்த மூணு குரங்கு பொம்மை
இருப்பதுண்டு.
நிதிஷ் குமார் அவர்கள் மேசையிலும்
இருந்தது.

மோடிஜியை பார்க்காதே.
மோடிஜி சொல்லைக் கேட்காதே.
மோடிஜியோடு பேசாதே.

அந்த பொம்மை இப்போது
உடைந்து கிடக்கிறது.
பாவம்.
யாராவது இப்போது அவருக்கு
அந்த பொம்மையை
வாங்கிக்கொடுங்கள்!
இல்லாவிட்டால்
எங்கிருந்தோ ஆட்டிப்படைக்கிறதே
ஒரு சூத்திரக்கயிறு
அது
இவரையும் ஆட்டிப்படைக்கும்!

_______________________________________