சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
ஒரு கிண்ண நிலவுப்
போதைக்கே
வானம் தெரிய வில்லை.
வீடு தெரிய வில்லை.
நூறு நிலவா?
அமாவாசையை
பர்தா போட்ட
பௌர்ணமி என்பேன்.
பௌர்ணமியை
ப்ளாக் ஹோல் சிமிழ்ப்
பொட்டு என்பேன்.
_________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக