வியாழன், 29 அக்டோபர், 2020

VOICE

\வாய்ஸ்

====================================ருத்ரா


ரஜனி எனும் 

எங்கள் உயிரே!

மூச்சே! பேச்சே!

தலைவா!

எங்கள் குரல் உன் நெஞ்சைத்

தொடவில்லையா?

எத்தனை நாளாய் உன் 

டையலாக்குகளின் கையில்

செங்கோலைக்கொடுத்து

இந்த தமிழ் பூமியை 

நீ ஆளவேண்டும் என்று

ஏங்கிக்கிடக்கிறோம்.

இந்த நேரத்தில் இப்படி ஒரு

அறிக்கையா?

சரி!

பரவாயில்லை.

நாங்கள் எங்கள் கன்னங்களில் வழியும்

கண்ணீர் வைரங்களை

கையில் ஏந்திக்கொண்டு

ஒரு முடிவுக்கு வந்து விட்டோம்.

அந்த அறிக்கையே இனி உங்கள்

தேர்தல் அறிக்கை.

பரத கண்டம் இது.

இந்த பரத புத்திரர்களுக்கு

உன் பாதுகைகளே போதும்.

வாய்ஸ் கொடு போதும்.

கோட்டை உன் வசம்.

இங்கு

எந்த துரும்பும் தூசும்

உன் மூச்சுகளையே

வந்தேமாதரம் என்று முழங்கும்.

"ஜெய்ஹிந்த்"

....................


ஜி அறிக்கை சரியாய் இருக்கிறதா?

இதை தமிழ்மக்களின் குரலாய்

ஊடகங்களில் ஊதி விட்டு விடலாமா?

டெல்லியில்

ஒரு ஜி இன்னொரு ஜி யிடம்

கேட்டுக்கொண்டிருக்கிறது.


__________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக