ஞாயிறு, 4 அக்டோபர், 2020

மந்திரக்கம்பளம்

 மந்திரக்கம்பளம்

========================================ருத்ரா


பூவென்று ஊதினாள்.

நகம் வெட்டி கையில் சேகரித்த‌

துணுக்குகள் காற்றில் பறந்தன.

அவன் 

விசுவலைஸ் செய்தான்.

ஆகா!

அவை நகவளைவுகள் இல்லை.

நிலாத்துண்டுகள்

நுண்ணிய பிறைகளாய்

வானம் பூராவும் மத்தாப்பு காட்டும் அல்லவா?

செல் ஃபோனில்

கூப்பிட்டு

என்ன நெயில் கட்டிங்க் முடிந்ததா?

என்றான்.

எப்பிடிடா இது?

எப்பிடி கண்டுபிடித்தாய் சொல்

என்றாள்.

சூடாகிப்போன டிவியில்

காதல் சூடேறி

எதையாவது பார்ப்போம்

என்று

"அலாடின்" பார்த்தான்.

காதல் வெளிச்சத்தின் அற்புதவிளக்கில்

கிடைத்த மந்திரக்கம்பளத்தில் 

உட்கார்ந்து தான் இத்தனையும் 

பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

என்றான்.

காக்கை உட்கார பனம்பழம் விழும்போது

பூதம் காட்டும் இந்தக்

காதல் வந்து அமர்ந்தால்

இவர்கள்

ஒரே திரைக்குள் வந்து

பிலிம் காட்டிக்கொண்டு தானே

இருப்பார்கள்.


=====================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக