திங்கள், 26 அக்டோபர், 2020

அக்கினிக்குஞ்சு

 

அக்கினிக்குஞ்சு
_________________________________________________________



ஒரு சிறந்த கவிதைக்குள்அக்கினிக்குஞ்சு ஒன்றுவைத்தீர்கள்.அது தீம் திரி கிட..என்கிறது.வெந்து தணியட்டும் இந்த காடு.ஆணாதிக்க எலும்பு மிச்சங்களைஅப்போது பார்க்கலாம்._______________________________ருத்ரா
இந்த என் கவிதைக்கு காரணமாய் இருந்த‌கவிதை இது.



அவளுக்கு பேசத்தெரியாது எனஎனக்காக யாரோ பேசியபோதுநான் அமைதியாக இருந்து விட்டேன்..அவளுக்கு கூச்ச சுபாவம் எனஎன் மௌனங்களை யாரோ மொழிபெயர்த்தபோது நான் அமைதியாக இருந்து விட்டேன்..அவளுக்கு இதுதான் நல்லதெனஎன் விருப்பங்களை யாரோ தேர்வு செய்தபோதுநான் அமைதியாக இருந்து விட்டேன்..அவளுக்கு என்ன தெரியும் எனஎனக்காக யாரோ முடிவெடுத்தபோது நான் அமைதியாக இருந்து விட்டேன்..இப்படித்தான்ஒவ்வொரு முறையும்எனக்கெனஎன் நன்மைக்கெனயார் யாரோ முடிவெடுத்துக்கொண்டிருந்தார்கள்..நானோபேருந்தின் ஜன்னலோர பயணியைப்போலவெறுமனே நடப்பவற்றைவேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன்..பின்பொருமுறைநீள் கனவொன்றிலிருந்துவிடுபட்டு வந்து...யாருடையதை போலவோயார் யாரோ நிர்மாணித்திருந்தஎனக்கானவாழ்விற்குள்யாரையோ போலஉள்நுழைந்துப்பார்த்தேன்..அந்தோஅங்குநான் இறந்து வெகு காலமாகிப்போய் விட்டிருந்தது!!!-ரிஸ்கா முக்தார்-

பேட்ஜ் ஐகான்
காட்சிகள் மூலம் கதை சொல்பவர்
 1h 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக