ஞாயிறு, 25 ஜூன், 2023

யோகா.

 



யோகா

______________________________________________________

ருத்ரா


புரிந்த பகுதி

புரியாத பகுதி.

நீ 

இப்போது எதில் நிற்கிறாய்?

உன்னால் எல்லாவற்றையும் 

விளங்கிக்கொள்ள முடியுமானால் 

நீ

புரிந்த பகுதியில் நிற்கிறாய்

என்று பொருள்.

உன்னால் எதையும் விளங்கிக்கொள்ள‌

முடியவில்லை என்றால்

நீ

புரியாத பகுதியில் நிற்கிறாய்

என்று பொருள்.

மெய்ஞானம் அஞ்ஞானம் 

என்று

இரு பெரும்பகுதிக்குள்

எல்லாம் இருக்கிறது.

இங்கே உள்ளது அங்கும்

அங்கே உள்ளது இங்கும்

சவ்வூடு பரவல் மூலம்

நிரவல் அடைகிறது.

கடவுளை மூர்க்கமாக ஆராதிக்கிறவனே

மூர்க்கமான நாத்திகன்.

ஒரே புள்ளியில் அவன் அடைந்து கொள்கிறான்.

அந்த புள்ளிப்பகுதியை விட‌

புள்ளியற்ற பகுதி கோடி கோடி..கோடி

மடங்குகள் பெரிது.

ஒரே புள்ளியைமட்டும் பார்க்கும் அவனுக்கு

எதுவுமே அவன் புலப்படாத நிலையில் இருக்கிறான்

அதோ கடவுள் என்று 

அவன் பார்க்கும்போது

அவன் பார்வை முழுமையை இழந்து விடுகிறது.

பார்த்தது மட்டுமே அவன் 

என்று சுருங்கிக்கொண்டு விடுகிறான்.

ஒன்றும் இல்லவே இல்லை

என்ற பெரும் சமுத்திரம் அவனைச்சுற்றி

திகில் ஊட்டிக்கொண்டிருக்கிறது.

எனவே 

மொத்தம் முழுமை இதையெல்லாம்

உணரும் வலிமை யற்று

அதை மட்டுமே கடவுள் என்று

அவன் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

அப்போது அவனுக்குள் இல்லாத‌

கடவுள் மட்டுமே

பெரும்பிம்பமாய்..

மிகப்பிரம்மாண்டமான பலூனாய்

விஸ்வரூபம் காட்டுகிறது.

அது கடவுளின் விஸ்வரூபம் அல்ல.

கடவுள் இன்மையின் விஸ்வரூபம்.

...................

இது ஒரு வகையான யோகா.

இதில் உடல் இல்லை

கை இல்லை கால் இல்லை.

எல்லாவற்றையும் சிந்திக்கிற‌

மனம் மட்டும் இருக்கிறது.

யோகா என்றால் அது சமஸ்கிருதம் 

என்று உன் சிந்தினைக்குள்

புடைத்து திணித்திருக்கிறார்கள்.

அது தமிழ்.

யாறு என்பதை ஆறு என்று சொல்வது

தமிழ்.

யாக்கை என்பதை ஆக்கை என்று உணர்த்துவது

தமிழ்.

அவ்வாறே

யாகம் என்பது ஆகம் அல்லது ஆக்கம்.

யோகம் என்பது ஓகம்...ஒடுக்கம்.

அறியாமை அறிவுக்குள் ஒடுங்குவதும்

அறிவு அறியாமையை திறப்பதுமாய்

ஒருங்கிணைகிறது.

சிந்திக்கிறதன் இந்த கூரிய பயிற்சியே 

யோகா.

உலகம் பூராவும் ஒலிப்பது தமிழே.


______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக