உடைந்த சிலேட்
_____________________________________
வண்ணதாசன் அவர்களே
அந்த உடைந்த கண்ணாடியில்
தெரிந்த உங்கள் முகம்
உங்கள் உடைந்த சிலேட்டு
காட்டிய செந்தமிழ் உருவத்தின்
சரித்திரமாக தெரிவது தானே
ஒரு உன்னத கவிதை வடிவம்.
உங்கள் கவிதைகளில்
முற்றுப்புள்ளிகளில் தான்
கவிதையின் அக்கினி கொழுந்து வீசிக்
காட்டும் முருகியல் வெளிப்படுகிறது.
அருமை வரிகள் அவை.
இப்படி ஒரு அழகியலில்
நம் தேச வறுமைக்கந்தலை
அழகாக காட்டியிருக்கிறார்
கி ரா அவர்கள்
வேட்டி எனும் சிறுகதையில்!
வேட்டியின் அந்தக்கிழிசல்
நம் தேசப்படம் வறுமையில் கிழிந்து
காட்டும் சரித்திரம் என்பதை
சொல்லாமல் சொல்லியிருப்பார்
கி ரா அவர்கள்.
இலக்கிய மேதைகளுக்கு
எழுதும் வரிகள்
அவர்கள் மடியில் புரளும்
பொம்ரேனியன்கள் தான்
அல்லது
உறுமும் சிங்கங்கள் தான்.
______________________________________
சொற்கீரன்