வியாழன், 2 செப்டம்பர், 2021

ஒரு ஈரமணல் லாரி

 ஒரு ஈரமணல் லாரி

____________________________ருத்ரா


அந்த ரோட்டின் தடம்

எழுதிய நீண்ட ஈரத்தின் கோடு

விரிந்த கூந்தலின் ஓலத்தோடு

அழும் ஒரு அன்னையின் 

இதயம் அல்லவா!

அந்த ஈரமணல் லாரி 

விட்ட கண்ணீர்

எத்தனை எத்தனை

ஆற்றுக்கன்னிகளை

வன்முறையாய்

கன்னிக்குடம் 

உடைக்க வைத்தது

என்ற‌

சமுதாயச்சாக்கடையில்

என்ன சரித்திரத்தை

நாம்

எழுதிக்கிழிக்கப்போகிறோம்?

பறவைகளின் வீடுகளுக்கு

வறண்ட குச்சிகளும் முட்களும்

போதும்.

நமக்குத்தான்

இந்த ஜீவநதிகளின் குடல் கிழித்து

கூடுகள் கட்டும் 

"வியாபாரம்" வேண்டியிருக்கிறது.

அத்தனை அளவுக்கு

ரத்தம் சொட்ட சொட்ட‌

வைக்கிறது

நம் "இயற்கை நேயத்தின்"

அசிங்கமான பக்கங்கள்.


_____________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக