கவிதை தந்தான் வைரமுத்து.
__________________________________________
"என்னோடு பல்லாங்குழி விளையாட வா"
வம்புக்கு இழுத்தது வானம்.
கோடி கோடி விண்மீன்கள்
அதன் கையிருப்பு என்ற
இறுமாப்பே அது.
கவிஞன் சிரித்துக்கொண்டான்.
இரண்டு மூன்று கல்லெறிந்தான்
மாணிக்கக்கற்களாய்.
எழுதினான் கவிஞன்.
"விண்ணெல்லாம் தமிழ் எனும் கண்கள்"
மறுகணம் இருண்டது வானம்.
கவிதையின் ஒளி மிஞ்சிய ஒளியால்.
"நிறுத்து நிறுத்து
பிரபஞ்ச ஒளியேற்று"
என்றது வானம்.
"கொஞ்சம் இமை துடித்தது தமிழ்.
எங்கும் இதயம் துடித்த தமிழ்".
கவிதை தந்தான் வைரமுத்து.
அதன் கருப்பொருள்
மனித நேயம் மட்டுமே.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக